Fact Check: மழையில் நெல்மூட்டைகள் நனைந்து சேதம் என பகிரப்படும் போட்டோ.. உண்மை என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் மழையால் விவசாயிகள் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைவதாகவும் தமிழ்நாடு அரசு கார் ரேஸ் உள்ளிட்டவற்றை நடத்துவதில்தான் கவனம் செலுத்துகிறது எனவும் சமூக வலைதளங்களில் படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தின் உண்மை தன்மை என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசின் பேக்ட்செக் டீம் விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளப் பக்கங்களில் " அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..
அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு .. கார் ரேஸ் என..... ஆனால் எங்களுக்கு மட்டும் என்றைக்கு கிடைக்குமோ பாதுகாப்பு? என விவசாயி ஒருவர் மழையில் நனைந்து மிதக்கும் நெல் மூட்டை ஒன்றின் மீது அமர்ந்து கேட்பதாக ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா பயணம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சென்னை கார் பந்தயம் ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் இந்த படத்துடன் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் பேக்ட்செக் டீம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திடீரென பெய்த மழையால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டு வந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தபோது எடுக்கப்பட்ட படம்தான் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் சேதமடைந்திருப்பதாக காட்டப்படும் படம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது; பொய்யான தகவலைப் பரப்ப வேண்டாம் எனவும் பேக்ட்செக் டீம் தெரிவித்துள்ளது.

பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Fact Check
வெளியான செய்தி
விவசாயிகள் நெல்மூட்டைகள் மழையில் நனைவதால் வேதனை
முடிவு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம்












Click it and Unblock the Notifications