"ஐஐடி மாடல்".. ஜூலை 1 முதல் நாடு முழுக்க கொரோனா லாக்டவுனா?.. "கிளப்பிவிட்ட" கும்பல்.. உண்மை என்ன?
டெல்லி: இந்தியாவில் நாளையில் இருந்து ஜூலை 31 வரை தேசிய அளவில் லாக்டவுன் போடப்படும் என்று பொய்யான செய்தி இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது கேஸ்கள் பெரிய அளவில் குறைந்துள்ளது. தினசரி கேஸ்கள் 50 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக 3,03,67,056 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,35,280 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 2,94,21,314 குணமடைந்துள்ளனர். 3,98,547 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

கேஸ்கள்
இந்தியாவில் கேஸ்கள் குறைந்துள்ள நிலையில் விரைவில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை முடிந்து 8 வாரங்களில் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் இது இரண்டாம் அலையை போல தீவிரமாக இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மூன்றாம் அலை
இந்த நிலையில் மூன்றாம் அலை காரணமாக இந்தியாவில் ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை தேசிய அளவில் முழு லாக்டவுன் போடப்படுவதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் இணையத்தில் பொய்யான செய்தி பரவி வருகிறது. ஐஐடி கான்பூரில் நடத்திய கொரோனா சோதனை மாடலில் லாக்டவுன் குறித்து பரிந்துரை செய்துள்ளதாகவும்.

நிலை
ஜூலை 15ல் கொரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று இந்த ஐஐடி மாடல் கூறுவதாகவும் இணையத்தில் தவறான தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இணையத்தில் பரவும் இந்த செய்தி பொய்யானது ஆகும். ஐடிடி கான்பூர் லாக்டவுன் குறித்து எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

லாக்டவுன்
அதேபோல் மத்திய அரசும் லாக்டவுன் போடுவது குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஜூலை மாதத்தில் தேசிய அளவில் லாக்டவுன் போடுவதற்கான திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இணையத்தில் பரவும் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது ஆகும்.

Fact Check
வெளியான செய்தி
இந்தியாவில் நாளையில் இருந்து ஜூலை 31 வரை தேசிய அளவில் லாக்டவுன் போடப்படும் என்று செய்தி இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.
முடிவு
மத்திய அரசும் லாக்டவுன் போடுவது குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஜூலை மாதத்தில் தேசிய அளவில் லாக்டவுன் போடுவதற்கான திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.












Click it and Unblock the Notifications