ஊழியர்களுக்கு கொரோனா பாதித்தால் நிறுவன உரிமையாளர் கைது.. பரவும் போலி மெசேஜ்
டெல்லி: ஊழியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால், அந்த நிறுவன உரிமையாளரை கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று, அரசு தெரிவித்துள்ளது.
லாக்டவுனில், சில துறைகளுக்கு மட்டும் தளர்வு அறிவித்துள்ளது அரசு. இதையடுத்து, அதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டின் பேரில், நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்து ஒரு செய்தி, வைரலாக சுற்றி வந்தது.

கேள்வி, பதில் பாணியில், இந்த செய்தி வைரலாக சுற்றி வருகிறது. வேலை செய்யும் எந்தவொரு நபராவது பாதிக்கப்பட்டிருந்தால், யார் பொறுப்பாவார்கள்?
இதற்கு பதில், '100 சதவீதம் தொழிற்சாலை உரிமையாளர்தான் பொறுப்பு. உரிமையாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். தொழிற்சாலை சீல் வைக்கப்படும். இதில் தொடர்புடைய அனைத்து நபர்களும் 14-28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு கூறுகிறது அந்த மெசேஜ்.
ஆனால் உள்துறை அமைச்சகம், லாக்டவுன் தளர்வு அறிவிப்பின்போது, இவ்வாறு கூறவில்லை. பேரழிவு மேலாண்மை சட்டம் 2005ன் கீழ், அபராதம் விதிப்பு பொருந்தும்.
பணியிடங்கள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. ஊழியர்களின் சமூக விலகல் மற்றும் சுத்திகரிப்பு அவசியம் என்று உத்தரவு கூறுகிறது. ஆனால், நிறுவன உரிமையாளர் கைது செய்யப்படுவார் என அந்த உத்தரவு கூறவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications