அனைத்து பயணிகள் ரயில் சேவையும் விரைவில் தொடங்குகிறதா? நம்பாதீங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் விரைவில் தொடங்கும் என்று ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது. இந்த பொய் செய்தி பல முறை பரப்பப்பட்டது, இதனால் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுமா என்று பல நபரும் கேட்டு வருகிறார்கள். மக்கள் யாரும் இந்த பொய் செய்தியை நம்ப வேண்டாம்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மே 3 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Fake News : all passenger Train services will not resume immediately

இந்நிலையில் மே 3ம் தேதிக்கு பிறகு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்தும் அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.. விமான சேவைகள் தொடங்குவது குறித்தும் இதுவரை முடிவு எடுக்கவில்லை.

ரயில் மற்றும் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையேயான பயணம் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்தன. பொருளாதாரம் புத்துயிர் பெற வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். எனினும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்து மாநிலங்களுக்கு இடையேயான பயண விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றார்கள்.

எனவே பொதுமக்கள் யாரும் மீண்டும் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் தொடங்கப்படும் என்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+