சட்டப் படிப்புகளுக்கான கிளாட் 2020 தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக பரவும் பொய் செய்தி
டெல்லி: பொது சட்டப் படிப்புகளுக்கான கிளாட் 2020 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி ஷேர் செய்யப்படுகிறது. ஆனால் இது பொய்யான செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் கிளாட் 2020 தேர்வுகள் குறித்து ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அதில், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான குழு கடந்த ஆக.25-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் வரும் செப்டம்பர் 7-ந் தேதி நடைபெற உள்ள கிளாட் 2020 தேர்வுகளை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஷேர் செய்யப்படும் செய்தி பொய்யானது என்றும் மாணவர்கள் இதனை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடியே செப்டம்பர் 7-ந் தேதி கிளாட் 2020 தேர்வுகள் நடைபெறும்; இதற்காக அட்மிட் கார்டுகளை விரைவில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களின் இளங்கலை, முதுகலை சட்டப்படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸால் இந்த கிளாட் தேர்வுகள் பல முறை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் மாதமே நடைபெற வேண்டிய இந்த தேர்வு மே 24-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஆகஸ்ட் மாதத்துக்கும் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 7-ந் தேதி நடைபெற உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கிளாட் 2020 தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு என்பது செய்தி
முடிவு
கிளாட் 2020 தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படவில்லை. செப்டம்பர் 7-ந் தேதி திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்.
ரேட்டிங்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications