மதுரை எய்ம்ஸ் தாமதத்துக்கு தமிழ்நாடு அரசு காரணமில்லை.. உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்
சென்னை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தற்போது தான் தமிழக அரசாங்கம் கொடுத்துள்ளது என்றும், தமிழ்நாடு அரசே எய்ம்ஸ் தாமதத்துக்கு காரணமென்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யானது எனறு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியே நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ரூ.1977.8 கோடி பட்ஜெட்டில் அமைக்க ஜப்பான் நாட்டு ஜெய்கா நிதிநிறுவனத்துடன், கடந்த 2021ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பீட்டில் 82% சதவீத தொகையான ரூ.1627.70 கோடி, ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள மீதமுள்ள 18% தொகையை மத்திய அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது. வேறெந்த கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த 17 ஆகஸ்ட் 2023 அன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை வரப்பெற்றுள்ளதாக அறிவித்த எய்ம்ஸ் நிர்வாகம், அடுத்த 33 மாதங்களில் விரைந்து மருத்துவமனை கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது..
இதற்கிடையே, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு மதுரை அருகே, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் செய்முறை வகுப்பு நடத்த திட்டமிட்டு விடுதி, வகுப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வாடகை கட்டிடம் பிடிக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மறுபக்கம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளுக்கான தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் முதற்கட்ட பணிகள் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நீண்டகாலம் கழித்து கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து கடந்த 2-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்ப்பித்ததது. இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என கடந்த 10-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை வழங்கியது. அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வழங்கியது.
இதையடுத்து தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. எல் & டி நிறுவனம் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்யும் வாஸ்து பூஜை போடப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு, ஹாஸ்டல் ஆகியவை கட்டுப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொய்: இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தற்போது தான் தமிழக அரசாங்கம் கொடுத்துள்ளது என்றும், தமிழ்நாடு அரசே எய்ம்ஸ் தாமதத்துக்கு காரணமென்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது.
உண்மை என்ன: இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்ட பதிலில், இது முற்றிலும் பொய்யான தகவல். 02,05.2024 அன்று எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பம் சமர்பித்தது. இதையடுத்து 20.05,2024 அன்று தமிழ்நாடு அரசு எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருக்கிறது. மதுரை எய்ம்ஸ் தாமதத்துக்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அனுமதிடியே காரணரணம் எனப்ப் பரவும் தகவல் பொய்யானது. வதந்திகளை நம்பாதீர்" இவ்வாறு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு கூறியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தற்போது தான் தமிழக அரசாங்கம் கொடுத்துள்ளது என்றும், தமிழ்நாடு அரசே எய்ம்ஸ் தாமதத்துக்கு காரணமென்று என பரவும் தகவல் பரவுகிறது
முடிவு
மே 2ல் சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி எய்ம்ஸ் விண்ணப்பம் சமர்பித்தது. இதையடுத்து மே 20ல் தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருக்கிறது என உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்
ரேட்டிங்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications