போன வாரம் ஆர்சிபி.. இந்த வாரம் சிஎஸ்கே! ரொம்ப சங்கட்டமா இருக்கு மக்களே! தங்கத்தின் விலை இனி இதுதான்!
சென்னை: வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடும் ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை, கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் முக்கிய நாடுகளின் மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள் ஆகியவை தங்கம், வெள்ளி சந்தையின் நிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த வாரம் விடுமுறை காரணமாக வர்த்தக நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் பலர் முக்கிய சர்வதேச நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். காரணம் போர் உள்ளிட்டவை தான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை முன்னேற்றம் பெற்றால், அதன் தாக்கம் உலக நிதி சந்தைகளில் மட்டுமின்றி தங்கம், வெள்ளி விலைகளிலும் பிரதிபலிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை
அதேபோல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகள் எடுக்கவுள்ள வட்டி விகித முடிவுகளும் சந்தை நிலையை மாற்றக்கூடியவை. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள் வெளியிடும் அறிவிப்புகள் முதலீட்டாளர்களின் மனநிலையை மாற்றக்கூடும் என கூறப்படுகிறது.
தங்கம், வெள்ளி
வட்டி விகிதம் உயர்த்தப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தங்கம், வெள்ளி விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இதனுடன், அமெரிக்காவில் வெளியாகவுள்ள வீட்டு வசதி தொடர்பான தகவல்கள், பணவீக்கம் குறித்த தரவுகள், நுகர்வோர் நம்பிக்கை நிலை உள்ளிட்ட பல பொருளாதார குறியீடுகளும் சந்தை போக்கை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
தங்க விலை வீழ்ச்சி
பெரிய பொருளாதார நாடுகளில் தொழிற்சாலை உற்பத்தி தொடர்பான தகவல்களும் இந்த வாரத்தின் முக்கிய கவனப் புள்ளிகளாக உள்ளன. கடந்த வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்தன. உள்ளூர் சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைந்ததுடன், வெள்ளி விலையும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ரூபாய் மதிப்பு குறைந்ததன் காரணமாக தங்க விலை வீழ்ச்சி ஒரு அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணை
சர்வதேச சந்தைகளிலும் இதேபோன்ற நிலை காணப்பட்டது. தங்கம் விலை கடந்த வாரத்தில் குறைந்ததுடன், வெள்ளி விலையும் அதைவிட அதிக அளவில் சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப வாரங்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை உறுதிசெய்ய விற்பனை செய்ததாலும் விலை குறைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மேற்காசியப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட சிக்கல்கள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை உயர்வும் உலக பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது. மேலும், அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பதும், அமெரிக்க அரசு திரட்டும் பத்திரங்களின் வருமான விகிதம் உயர்ந்திருப்பதும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணங்களாக கூறப்படுகின்றன. அமெரிக்காவில் வெளியான விற்பனை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகள் எதிர்பார்த்ததை விட நல்ல நிலையில் இருந்ததால், டாலர் மதிப்பு மேலும் வலுப்பெற்றதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சந்தை நிபுணர்கள்
வரும் நாட்களில் தங்கம் விலை கீழ்மட்டத்தில் ஒரு அளவுக்கு ஆதரவு பெற வாய்ப்பு இருந்தாலும், டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவாக இருந்தால் மேலும் விலை சரிவு ஏற்படலாம் என சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெள்ளி விலை தங்கத்தை விட அதிக ஏற்ற இறக்கங்களை சந்திக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், வெள்ளி ஒரு முதலீட்டு உலோகம் மட்டுமல்லாமல் தொழில் துறையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அதன் விலை மாற்றம் வேகமாக இருக்கும்.
தங்கம் மற்றும் வெள்ளி
அதே நேரத்தில், மேற்காசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் அல்லது மத்திய வங்கிகள் வட்டி விகிதம் குறைக்கும் சிக்னலைக் காட்டினால், தங்கம் மற்றும் வெள்ளி வாங்கும் ஆர்வம் மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். மொத்தத்தில், உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் இந்த வாரம் தங்கம், வெள்ளி விலைகளின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications