பில் இல்லாத பழைய நகைகளை.. இனி அடகு வைப்பது எப்படி? ஆர்பிஐ கொண்டு வரும் விதி.. பெரிய சிக்கல்!
சென்னை: ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் தங்க நகை கடனை அடகு வரைவு விதிகளால் மக்கள் பலரும் பழைய தங்க நகைகளை அடகு வைப்பது சிக்கலாக மாறி உள்ளது. பலரும் பில் இல்லாத பழைய நகைகளை அடகு வைப்பது சிக்கல் ஆகி உள்ளது.
ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் தங்க நகை கடனை அடகு வரைவு விதிகளின் படி பில் இல்லாத நகைகளை அடகு வைக்க முடியாது. ஒரு நகையை அடகு வைக்கிறீர்கள் என்றால்., அதன் பில் உங்களிடம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நகை அடகு கடைகள் உங்கள் நகையை எடுத்துக்கொள்ளாது. உதாரணமாக உங்களிடம் 40 வருட பழைய நகை இருக்கலாம்.
அதன் பில் இல்லாமல் போகலாம். ஆனால் அதை அவசரத்திற்கு அடகு வைக்க வேண்டும் என்றால் சிக்கல் ஏற்படலாம். ஆனால் ஆர்பிஐயின் இந்த வரைவு விதியில் சில சலுகைகள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. பின்வரும் ஆவணங்களை கொடுத்து நீங்கள் உங்கள் பழைய நகைகளை அடகு வைக்கலாம் என்ற சலுகை கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
KYC ஆவணங்கள்: உங்கள் அடையாளம் மற்றும் முகவரியைச் சரிபார்க்க ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது பில்கள் போன்ற நிலையான KYC ஆவணங்களை வழங்கவும்.

உரிமைப் பிரகடனம்: பில் இல்லாத நிலையில், தங்கம் உங்கள் உரிமையான சொத்து என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ஃபார்மில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். இந்த தங்கம் என்னுடையதுதான்.. அதை நான் வேறு எவரிடம் இருந்தும் பெறவில்லை. இது எனக்கு சொந்தமானது என்று நீங்கள் கையெழுத்திட வேண்டும்.
தங்க மதிப்பீடு: கடன் வழங்குபவர் உங்கள் தங்கத்தின் தூய்மை மற்றும் எடையை எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் (XRF) சோதனை போன்ற முறைகளைப் பயன்படுத்தி மதிப்பிடுவார். இந்த மதிப்பீடு தங்கத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது. சிலர் கைகளில் வைத்தே மதிப்பிடுவார்கள். பொதுவாக, கடன் வழங்குபவர்கள் RBI வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தங்கத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பில் 75% வரை வழங்குவார்கள்.
இதன் வழியாக நீங்கள் உங்களது பில் இல்லாத நகைகளை பெறுவதற்கு ஏற்ற வகையில் சலுகைகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
விதிகள் என்னென்ன?
தங்க நகை லோன் வழங்குவதற்கு ஆர்பிஐ புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில், நகையை அடகு வைத்து கடன் வாங்குவது மிகவும் கடினமான விஷயமாக மாறும்.
ஆர்பிஐ வெளியிட்ட இருக்கும் புதிய வரைவு விதியின்படி தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும். அதாவது பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். தெரிந்த முகங்கள், நண்பர்கள், பாரம்பரிய வாடிக்கையாளர்கள் என்ற காரணங்களுக்காக பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். ஆனால் இனி அப்படி வழங்க முடியாது.
உங்களின் நகை 1 லட்சம் ரூபாய் என்றால்.. அதில் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்க முடியும். அதேபோல் தங்கம் விலை இன்று திடீரென உயருகிறது என்றால்.. உதாரணமாக இன்று 10000 ரூபாய் உயருகிறது என்றால்.. அதை வைத்து நீங்கள் நகையை அடகு வைக்க முடியாது. கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும். அதாவது கடந்த 1 மாதத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கிறது என்ற சராசரியாக பார்த்துவிட்டு மட்டுமே கடன் கொடுக்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் வெறுமனே போய் எல்லா இடத்திலும் நகை அடகு வைக்க முடியாது. நகையை அடகு வைக்க அதன் பில்லை காட்ட வேண்டும். அந்த பில்லில் கடன் கேட்பவரின் பெயர் அவரின் தந்தை பெயர் இருக்க வேண்டும். நகையின் விவரங்கள் அனைத்தும் அந்த கடன் பத்திரத்தில் இருக்க வேண்டும்.
தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க பார்களை அடகு வைக்க முடியாது என்ற விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications