வேலையை காட்டிய RBI.. தங்கத்தை வைத்து ஆடும் தரமான கேம்.. இந்தியாவின் மிக முக்கியமான மூவ்!
சென்னை: உலக அளவில் மத்திய வங்கிகள் தங்கத்தை மீண்டும் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹12,272 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹11,249 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,389 ஆகவும் உள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், நிகர அளவில் 220 டன் தங்கத்தை தங்கள் கையிருப்பில் சேர்த்துள்ளன. இதனால் தங்கத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அதன் விலை உயர்வு, மத்திய வங்கிகளின் தீவிர கொள்முதல்களால் வேகமாக உயர்ந்தது. உலக தங்க கவுன்சிலின் (WGC) 'தங்க தேவை போக்குகள் Q3 2025' அறிக்கையின்படி, இந்த 220 டன் கையிருப்பு, முந்தைய காலாண்டைக் காட்டிலும் 28% அதிகம்.
தங்கத்தை வாங்கி குவிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 600 கிலோ தங்கத்தை தனது சேமிப்பில் சேர்த்துள்ளது. தொடர்ந்து இந்தியா தங்கத்தை அதிக அளவில் வாங்குகிறது. இதன் மூலம், செப்டம்பர் இறுதி வாரத்தில் மொத்த தங்க இருப்பு 880 டன்களாக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 30-ல் முடிவடைந்த காலாண்டில் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 10% அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு 199.5 டன்னாக இருந்த கொள்முதல் தற்போது உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக சரிந்த கொள்முதலுக்குப் பிறகு இந்த உயர்வு குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத விலை ஏற்றம் இருந்தபோதிலும், தங்கத்தின் மீது மத்திய வங்கிகளின் தீவிர ஈடுபாட்டை இது காட்டுகிறது.
மத்திய வங்கிகளின் தங்க கையிருப்பு
இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், மத்திய வங்கிகளின் தங்க கையிருப்பு 634 டன்களாக உள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வாங்கப்பட்ட 724 டன்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு.
டிஜிட்டல் தங்க முதலீடுகள், அதாவது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFs) மற்றும் அதுபோன்ற கருவிகள், கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது 221 டன்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 134% அதிகமாகும், மேலும் முந்தைய காலாண்டைக் காட்டிலும் 30% அதிகமாகும்.
தங்கத்தில் உயரும் முதலீடு
கஜகஸ்தான் தேசிய வங்கி மூன்றாவது காலாண்டில் 18 டன்களுடன் மிகப்பெரிய கொள்முதல் செய்த வங்கியாக உருவெடுத்துள்ளது. பிரேசில் மத்திய வங்கி 15 டன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது 2021-க்குப் பிறகு பிரேசில் மேற்கொண்ட முதல் கொள்முதல் ஆகும்.
உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, மூன்றாவது காலாண்டில் மத்திய வங்கிகள் மேற்கொண்ட தங்க கொள்முதலில் 66% தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நடைமுறை 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது.
உலக மத்திய வங்கிகள் தங்கத்தின் மீது இவ்வளவு தீவிரமாக ஆர்வம் காட்டுவதன் அர்த்தம்.. தங்கம் விலை மேலும் உயரப்போகிறது என்பதே. இதே நிலை தொடர்ந்தால் தங்கம் கண்டிப்பாக உச்சத்தை நோக்கி செல்லும்.
-
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
கயிறு அவிழப்போகுது.. தங்கத்தின் 'திக் திக்' நிமிடங்கள்.. ஸ்விஸ் வங்கி விடுக்கும் பயங்கர வார்னிங்! -
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications