3x2x1 ஈஸி ஃபார்முலா.. ஆரோக்கிய வாழ்வுக்கு 10-3-2-1 விதி.. ரொம்ப சிம்பிள்.. இரவில் நல்ல தூக்கம் வரும்
சென்னை: ஆரோக்கியமான வாழ்வு அமைய, ஆழமான தூக்கம் அனைவருக்கும் தேவைப்படுகிறது.. இதற்கு சுவாசப்பயிற்சி, முறையான உணவுப்பழக்கம், தியானம் போன்றவற்றை கடைப்பிடிப்பதுடன், சில தீய பழக்கவழக்கத்தையும் அடியோடு நிறுத்த வேண்டியிருக்கிறது.. அதேபோல, நிம்மதியான தூக்கத்துக்கு 3-2-1 பார்முலா பெரிதும் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் என்ன?
நமக்கு முறையான மற்றும் சரியான தூக்கம் இருந்தாலே ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும் என்கிறார்கள். அந்த அளவுக்கு தூக்கம் அனைவருக்குமே அத்தியாவசியமானது. இவைகளுடன் சத்தான உணவு, தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் சேரும்போது, நிம்மதியான ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.

தூங்கும் முன்பு இதை செய்தாலே போதுமே
ஒரு ஆரோக்கியமான மனிதன் தினந்தோறும் 6 முதல் 8 மணி நேரம் இரவு தூங்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.. தூங்கும் நேரம் இதுவென்றாலும், தூங்க செல்வதற்கு முன்பேயே கண்களுக்கு ஓய்வை தந்துவிட வேண்டுமாம். அதனால்தான், கம்ப்யூட்டர், டிவி, செல்போன், டேப்லெட் என எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்கிறார்கள். ஏனென்றால், இதிலிருந்து வெளியாகும், "நீல ஒளி" மூளையை களைப்படைய செய்துவிடுவதுடன், ஓய்வுக்கும் இடம்தராது.
அதேபோல, இரவு தூங்க போவதற்கு முன்பு, கால் பாதங்களில், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மசாஜ் செய்து விட்டு தூங்க போனால் ஆழ்ந்த தூக்கம் வரும்..
சோம்பு தண்ணீர் அவ்வளவும் நல்லது
தூங்கும் முன்பு சோம்பு டீ, சோம்பு தண்ணீர் குடிக்கலாம். எளிதான செரிமானம் நடந்து, தேவையற்ற சதைகளை கரைக்க இந்த சோம்பு தண்ணீர் உதவும். அதுமட்டுமல்லாமல், மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, ஆழ்ந்த தூக்கத்திற்கும் சோம்பு நீர் வழிவகுக்கும்.
தினமும் 8 மணி நேரம் தூக்கத்தை பெற வேண்டுமானால், அதற்கு உதவுவதுதான் "3-2-1" என்ற ஃபார்முலா.. இந்த ஃபார்முலாவை பலரும் பின்பற்ற துவங்கியிருக்கிறார்கள்.
3-2-1 ஃபார்முலா என்றால் என்ன
அதாவது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் மது, இறைச்சி அல்லது செரிமானமாகாத உதவை சாப்பிடக்கூடாது.. இவைகளை 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே முடித்து விட வேண்டும்.. அதேபோல, 2 இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மனதை அமைதியாக ஒருமுகப்படுத்த துவங்க வேண்டும்.. இதற்கான ஓய்வான நிலையில் மனதையே வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, 1 மணி நேரத்திற்கு முன்பாகவே, டிவி, கம்ப்யூட்டர், செல்போன் என எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். இதுதான் அந்த 3-2-1 பார்முலாவாகும்.
10-3-2-1 விதி என்றால் என்ன
அதேபோல, தூங்குவதற்கு 10 மணி நேரம் முன்னதாக காபி, டீ, ஜூஸ் குடிப்பதை முடித்து விட வேண்டுமாம்.. காரணம் காபி உள்ளிட்ட பானங்களிலுள்ள காஃபின், தூக்கத்தை கெடுத்துவிடக்கூடியவை.. சீரான தூக்கத்தையும் தரவிடாது. எனவே, 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்றால், முதலில் 3-2-1 பார்முலாவை ஒரு வாரத்திற்கு பின்பற்ற துவங்கிவிட்டாலே, நாளடைவில் அதுவே பழகிவிடும்.. அதற்கு பிறகு, 10-3-2-1 பார்முலாவை முயற்சித்தால் எளிதாக பழக்கப்படுத்தி கொள்ள முடியும் என அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications