மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின் அற்புதம்! எப்படி சாப்பிடுவது?
சென்னை: கோரை கிழங்கு எல்லா தரப்பினருக்கும் நிறைய மருத்துவ பலன்களை கொடுக்கிறது.
சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக் கிழங்கு. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கிழங்கு சேப்பழங்கிழங்கு போல் இருக்கும். அதன் நுனியில் வேர் இருக்கும்.

இதன் மருத்துவ பயன்களை எடுத்துக் கொண்டால் கோரை கிழங்கு எல்லாவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலேரியா காய்ச்சலையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாயை தூண்டும்.
அத்துடன் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இந்த கோரை கிழங்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. மார்பகத்தில் கோரைக் கிழங்கை அரைத்து தேய்க்க வேண்டும். அது போல் பூஞ்சை காளான்கள், நுண்ணுயிர்களை போக்கும் ஆற்றல் உள்ளது. சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மைத்தன்மை கொடுக்கும். சிறுநீரை பெருக்கும். அது போல் வெள்ளைப்படுதலுக்கு அருமருந்தாகும்.
இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும். உடலில் மருக்கள் இருந்தால் கோரைக் கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர முகச்சுருக்கம் சரியாகும். முகப்பரு வராது. அது போல் உடல் வலியை போக்கும்.
உடலுக்கு பலத்தை கொடுக்கும். குழந்தைகளுக்கு செரிமான சக்தியை ஏற்படுத்தும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சரி செய்யும். உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும். மூட்டு வலி, தசை வலி நீங்கும். கோரைக்கிழங்கை காய்ச்சாத பாலுடன் சேர்த்து பூசி குளித்தால் வியர்வை நாற்றம் அகலும். குடலில் இருக்கும் புழுக்களை போக்கும்.
சொரி, சிரங்கை நீக்கும். அடிக்கடி சளி பிடித்தாலும் கோரைக் கிழங்கு அதை குணமாக்கும். கோரை கிழங்கு பொடியை பாலுடன் சேர்த்து குடித்தால் ஆஸ்துமா விலகும். மஞ்சள் காமாலையை போக்கும் அருமருந்து. இது புல் வகையை சேர்ந்தது. கசப்பு தன்மையுடன் இருக்கும். சரும நோய்களை போக்கும் தன்மை உள்ளது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாத்து என்றும் இளமையுடன் இருக்க வைக்கும்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications