தனிமையில் இருப்பதால் மரணம் கூட ஏற்படும்.. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஷாக் தகவல்!
வாஷிங்டன்: தனிமையில் இருப்பது ஒருவரின் மனநிலமையை கடுமையாக பாதிப்பதோடு, அது உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், இதனால் இதயநோய், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் அகால மரணம் போன்ற ஆபத்துகளும் இருப்பதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிவேகமாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் இளம் தலைமுறையினர் பலரும் எதிர்கொள்ளும் பெரும் சவால் தனிமைதான். தனிமையில் இருப்பது ஒருவரின் மனநிலமையை கடுமையாக பாதிப்பதோடு, அது உடல் நலனுக்கும் தீங்கு விளைவிப்பது என்று பல்வேறு சுகாதார நிபுணர்களும் சொல்கிறார்கள். குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காமல் போவது உள்ளிட்டவை ஒருவரை தனிமையாக உணரவைக்கும்.

தனிமைதான் உலளாவிய பெரும் சுகாதார பிரச்சினை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில், தனிமையாக உணர்வது ஒரு மனிதருக்கு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தற்கொலை போன்ற மனநலப் பிரச்சனைகள் ஏற்படுத்துகின்றன. உடல் நலம் சார்ந்து என்றால் இதயநோய், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் அகால மரணம் போன்ற ஆபத்துகள் காத்திருப்பதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரையும் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவர்களை இந்த தனிமை பிரச்சினை பாதிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. தனிமை சார்ந்த பிரச்சினையை கையாள்வது எப்படி என்பது குறித்தும் உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது:-
சமூகத்தில் மிகவும் ஆக்டிவ் நபராக இருப்பதன் மூலம் புதியவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்படும். பாசிட்டிவ் ஆக நினைக்க வேண்டும். அதோடு, புறக்கணிப்பட்டாலும் அதை பற்றி கவலை இன்றி பாசிட்டிவ் ஆன விஷயங்களில் கவனம் செலுத்திவிட்டு செல்ல வேண்டும். உங்களைப் போல எண்ணம் கொண்டவர்கள் இடத்தில் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீங்கள் நம்பும் நபரிடம் அதிகம் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட சில தகவல்களையும் கூறியுள்ளது. மேலும் தனிமை மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க, நாடு தழுவிய அளவில் உக்திகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் தனது உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications