Thengai Poo: சகுனத்தை விடுங்க! தேங்காய் பூ சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
சென்னை: தேங்காய் பூவை சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் தேங்காயில் பூ இருந்தால் நல்ல சகுனம் என்றும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தேங்காய் பூ என்றால் என்ன என்பதையும் பார்க்கலாம். இந்த தேங்காய் பூ சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும். பஞ்சு போல் இருக்கும்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பூ விழுந்த தேங்காய் மட்டும் சாப்பிட்டு பாருங்க! உங்க உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும்ன்னு தெரியுமா?

தேங்காய் பூவை பார்த்திருப்பீர்கள். நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் தேங்காய் பூ. நாம் பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கக் கூடும்.
தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில்தான் இருக்கிறது.
இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல மிகவும் ருசி கொண்டது. உண்மையில் தேங்காய் பூவின் பலனைப் பற்றி தெரிந்து கொண்டால் தேங்காய் பூவை தேடி தேடி போய் வாங்கி சாப்பிடுவீர்கள்.
உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக சிலர் கருதுவார்கள். அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சி.
தேங்காய் பூவின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
தேங்காய் பூவை தினமும் சாப்பிட்டால் தைராய்டு சுரப்பை ஒழுங்குபடும். தேங்காய் பூவை அடிக்கடி சாப்பிட்டால் தைராய்டு பிரச்சினையிலிருந்து முற்றிலும் குணமாகலாம்.
தேங்காய் பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தேங்காய் பூவை சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். உடலுக்கு தேவையான தாதுக்களை தேங்காய் பூ கொடுக்கும்.
தேங்காய் பூ சாப்பிட்டால் உடலுக்கு வைட்டமின் அதிகளவு கிடைக்கும். உங்கள் குடலுக்கு எந்த வித பிரச்சினை வராமல் பாதுகாக்கும். தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த முடியும்.
தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டால் இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்யும். தேங்காய் பூவை சாப்பிட்டால் ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கும். இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க தேங்காய் பூ உதவி செய்யும். தேங்காய் பூ அடிக்கடி சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும். தேங்காய் பூ சாப்பிட்டால் புற்றுநோய் செல்களை அழித்து விடும்.
தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். உடல் எடை குறையும். தேங்காய் பூ சாப்பிட்டால் சிறுநீரக தொற்று நோய்களை சரிப்படுத்தும். தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்து காணப்படுகிறது.
தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால் முகத்தில் சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்கவே நெருங்காது. தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் சூரியனால் ஏற்படும் சரும பாதிப்புகள் நம்மை நெருங்காது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications