Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளிர் காலத்திலும் சில் தண்ணீரில் குளிப்பதுதான் நல்லது! ஆனா இவங்க மட்டும் பச்சை தண்ணீரை தொடவே கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலை முதல் வெளியே சுற்றி வேலை செய்துவிட்டு, இரவு வீடு திரும்பும் போது பலருக்கும் ஒரு குளியல் போட வேண்டும் என்றே தோன்றும். பொதுவாகப் பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களும் கூட மழை மற்றும் குளிர் காலங்களில் சூடு தண்ணீருக்கு மாறுவார்கள். ஆனால், உண்மையில் குளிர்ந்த தண்ணீர் அல்லது சூடு தண்ணீர் இரண்டில் எது நல்லது.. எது உடலுக்கு அதிக நன்மை தரும் என்பதை நாம் பார்க்கலாம்.

இப்போது தமிழ்நாட்டில் மழை சீசன் ஆரம்பித்துவிட்டது. மாநிலம் முழுக்க அதிலும் குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு உட்பட வடதமிழக பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

water winter

இதுபோல குளிர் பருவதத்தில் பொதுவாக நமது வாழ்க்கை முறையும் கூட சற்று மாறும். வீடு திரும்பியதும் எப்போதும் பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களும் கூட சூடு தண்ணீரில் குளிப்பார்கள். ஆனால், உண்மையில் இரண்டில் எது உடலுக்கு நல்லது. இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்..

உதவுகிறது: பொதுவாக 15 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பத்தில் இருக்கும் தண்ணீரில் குளிப்பது தான் குளிர்ந்த நீரில் குளிப்பதாகக் கருதப்படும். இது இளைஞர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இது நம்மை ஆக்டிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. தொடர்ந்து பச்சைத் தண்ணீரில் குளித்து வந்தால் அது எடை இழப்பு, எனர்ஜி அதிகரிப்புக்கும் கூட உதவுவதாக மருத்துவர் திவ்யா கோபால் குறிப்பிடுகிறார்..

இது தொடர்பாக டாக்டர் சந்தோஷ் குமார் அகர்வால் மேலும் கூறுகையில், "குளிர்ந்த நீரில் குளிப்பது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. குளிர்ந்த நீரில் குளிக்கும் போது அது இதயத்தில் உள்ள தமனிகளையும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம் நமது ரத்த அழுத்தமும் கூட குறைகிறது" என்கிறார்.

ஏகப்பட்ட பலன்கள்: சருமத்தில் ஏற்படும் எரிச்சல், வீக்கம், தசை வலி ஆகியவற்றைக் குறைக்கவும் குளிர்ந்த நீரில் குளிப்பது உதவுவதாக மருத்துவர் ஜஸ்மீத் சிங் குறிப்பிடுகிறார். மேலும், குளிக்கும் போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்தினால் அது யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் என்றும் இது உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் காட்டுவதாக மருத்துவர் ஜஸ்மீத் குறிப்பிடுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாகக் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது, நமது உடலின் வெப்பம் குறைகிறது. இதையடுத்து நமது உடல் தன்னை தானே மீண்டும் சூடாக்கிக் கொள்ள முயலும். அப்போது வெள்ளை ரத்த அணுக்கள் ரிலீசாகி, அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, குளிர் காலமாக இருந்தாலும் சூடு தண்ணீரை விடக் குளிர்ந்த நீரில் குளிப்பதே நமக்கு நன்மைகளைத் தருகிறது.

இவர்கள் தொடவே கூடாது: அதேநேரம் வயதானவர்கள், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், மூளை பக்கவாதம் அல்லது இதய பாதிப்பு உள்ளவர்கள் குளிர் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிர்க்கும் போது திடீர் வெப்பநிலை மாற்றத்தால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கூட குளிர் காலங்களில் சற்று வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+