வாழையிலையிலே.. இதென்ன ஆச்சரியம்.. வாழ வைக்கும் வாழையின் மகத்துவம்.. வாழையிலையில் கேசரி தெரியுமா?
சென்னை: வாழையிலையில் உணவு பரிமாறி சாப்பிடுவோம்.. ஆனால், வாழையிலையே, உணவாகி போவதுண்டு தெரியுமா? சத்துக்களும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த வாழையிலையில் செய்யப்படும் சில உணவுவகைளை பார்ப்போம்.
வாழையை விதைத்தால் அவர்கள் குடும்பம் காலம் கடந்து வாழும் என்பார்கள்.. காரணம், வாழையில் தண்டு முதல் இலை வரை அத்தனையும் மருத்துவம்.. மகத்துவம்..!!

வாழையிலையில், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்பு சத்துக்கள் உள்ளன.. இவைகள் கண்களை பாதுகாத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. வைட்டமின் ஏ.சி, மற்றும் கே விட்டமின்கள் குடற்புண்களை ஆற்றும்.. இந்த இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்துள்ளன.
பச்சையம்: நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி, இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, இலையில் உள்ள சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதெல்லாம் சேர்ந்துதான் நமக்கும் ஆயுளை கூட்டுகிறது. தலைமுடி கருப்பாக இருக்கும். வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், வாழையிலையில் பரிமாறி சமைப்பதுடன், இந்த வாழையிலையை வைத்தே சமையல் செய்வார்கள்.. மீன் பொழிச்சது இந்த வாழையிலையில் செய்யப்படும் கேரளாவில் மிகப்பிரபலமான உணவாகும். ஆனால், வாழையிலையில் அல்வாவும் செய்வார்கள்..
வாழை இலைகள்: 2 வாழை இலைகளை சுத்தப்படுத்தி, சிறு துண்டுகளாக நறுக்கி, அதனை மிக்சியில் போட்டு சிறிதளவு எலுமிச்சம்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துகொள்ள வேண்டும். பிறகு, ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, அதில் முந்திரி, பூசணி விதைகளை தனித்தனியாக சேர்த்து நன்றாக வறுத்து வைத்து கொள்ள வேண்டும்...
அதே வாணலியில் இன்னும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வாழை இலை விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்க வேண்டும். பிறகு, சோள மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ள வேண்டும். வாழை இலை விழுது நன்றாக வதங்கி கெட்டியானதும், அதில் சோள மாவு கரைசலை போட்டு கிளறவேண்டும்.
வாழையிலை அல்வா: அடுத்ததாக, ஏலக்காய் பொடி, சர்க்கரை, கலந்து, கொஞ்சம் கொசமாக நெய் ஊற்றிக் கிளறிவிட்டு, இறுதியில், வறுத்த முந்திரி, பூசணி விதைகளை தூவினால், வாழையிலை அல்வா ரெடி..
இந்த வாழையிலையில், சேகரியும் செய்யலாம்.. 2 வாழையிலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணிர் ஊற்றி மிக்சியில் போட்டு, பேஸ்ட் போல அரைத்து எடுதது கொள்ள வேண்டும்.. பிறகு அந்த சாறை மட்டும் தனியாக வடிக்கட்டி எடுக்க வேண்டும். ஒரு வாணலில், லேசாக ரவையை வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவேண்டும்.. முந்திரி பாதாம் பருப்புகளையும் சிறிது நெய்விட்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
வாழை கேசரி: இப்போது இன்னொரு வாணலில், வடிகட்டிய வாழை சாறை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.. 2 நிமிடம் கொதித்துவரும்போது, அதை மறுபடியும் மெல்லிய துணியில் வடிக்கட்டி எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாறை மறுபடியும் வாணலில் ஊற்றி, அது கொதித்தவுடன் ரவையை கொட்டி கிளற வேண்டும்.. பிறகு நாட்டுச்சர்க்கரை சேர்த்து, முந்திரி பருப்புகளை சேர்த்து, சிறிது நெய், விட்டு இறக்கினால் வாழை கேசரி ரெடி.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications