கொத்து கொத்தாக.. கொட்டும் முடிக்கு வல்லாரை.. ஈஸியான வெயிட் லாஸுக்கு வல்லாரைக்கீரை கஞ்சி.. ஆச்சரியம்
சென்னை: மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் வல்லாரை கீரை, காய்ச்சலையும் குணப்படுத்தக்கூடியது. இதற்கு உதவக்கூடிய வல்லாரை மாத்திரைகளை நாமே வீட்டில் தயாரிக்கலாம். எப்படி தெரியுமா?
அனீமியா உள்ளவர்களுக்கு இந்த கீரையை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது.. சருமத்துக்கு ஆரோக்கியத்தையும், பொலிவையும் தரக்கூடியது.. உடலில் நமைச்சல், எரிச்சல், புண்கள் போன்றவைகளை குணப்படுத்தக்கூடியது இந்த கீரை..

மன அழுத்தத்தை தடுத்தும் இந்த வல்லாரைக் கீரை, நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது.. வல்லாரை கீரையை கழுவி சுத்தம் செய்து, நீர்விட்டு அரைத்து ஜூஸாக்கி தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வந்தால் மாரடைப்பு நம்மை நெருங்காது.
வல்லாரைக்கீரை: நினைவாற்றலை பெருக்கக்கூடிய சக்தி மட்டுமல்லாமல், மனித மூளை நன்றாக செயல்பட உதவும் சத்துக்கள், இந்த வல்லாரைக்கீரையில் உள்ளது.. அதனால்தான் குழந்தைகளுக்கு இந்த கீரையை கட்டாயம் சாப்பிட தர வேண்டும் என்பார்கள். ஆனால், இது லேசான கசப்பு தன்மை உடையது என்பதால், வல்லாரையை பொடி போல தயாரித்து தரலாம்.
இந்த வல்லாரை இலைகளை நிழலில் காயவைத்து, பவுடராக அரைத்து, சலித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.. 1 முதல் 2 கிராம் அளவுக்கு எடுத்து, தினமும், காலை, மாலை என 2 வேளையும், ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடிக்க தரலாம்.. அல்லது வெறுமனே 2 வல்லாரை இலைகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட தரலாம். இதனால் குழந்தைகளின் திறன், நினைவாற்றல், சுறுசுறுப்பு தன்மை பெருகிவிடும்.
பற்பொடி: பற்கள் சம்பந்தமான நோய்களை தீர்க்கவும், இந்த வல்லாரையை பொடி போல தயாரித்து பயன்படுத்தலாம்.. இந்த பொடியில் பல் தேய்த்து வந்தால், ஈறுகளுக்கு வலு கிடைப்பதுடன், பற்களின் கறைகள் நீங்கும்....
அதேபோல, இந்த கீரையுடன் மிளகு, துளசி இலை போன்றவற்றை சம அளவு எடுத்து, விழுதுபோல அரைத்து, மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருக்கும் சமயங்களில், இந்த மாத்திரையை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்..
சத்தான கஞ்சி: உடல் எடையை குறைய வேண்டுமானால், இந்த கீரையை, புழுங்கல் அரிசியுடன் சேர்த்து கஞ்சி போல செய்து குடிக்கலாம்.. அதாவது, புழுங்கல் அரிசியை கொரகொரப்பாக அரைத்து கழுவி கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், சீரகம், உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில், எண்ணெய், கடுகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து, சுத்தம் செய்து வைத்திருக்கும் வல்லாரை கீரையையும் சேர்த்து வதக்கி, குக்கரிலுள்ள கஞ்சியில் கொட்டி கலந்துவிட வேண்டும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications