அரிசி வாங்க போறீங்களா? பிளாஸ்டிக் அரிசி கலப்படத்தை கண்டறிவது எப்படி? 2 வழிகளில் கண்டுபிடிக்கலாம்!
சென்னை: உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் அரிசியை எப்படி எளிதாக கண்டறிவது என்பதை பார்க்கலாம். கண்டறிந்து புறக்கணிப்பதன் மூலம் உடல்நலத்தை பாதுகாப்போம்.
அந்த காலத்தில் 80 வயது, 90 வயது ஆனாலும் பாட்டிகள், தாத்தாக்கள் எல்லாம் மூட்டை தூக்கும் அளவுக்கும் தண்ணீர் குடத்தை இடுப்பில் தூக்கும் அளவுக்கும், வயல்களில் ஒற்றை ஆளாக இறங்கி வேலை செய்யும் அளவுக்கும் இருந்தார்கள்.

ஒரு கல்யாணத்துக்கே ஆனாலும் தடபுடலாக சமைத்து வந்தார்கள். இதற்கு காரணம் இவர்கள் எடுத்துக் கொண்ட உணவு முறைதான். ராகி, கம்பு, சோளம், சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், கீரைகள், பயறு வகைகளை எடுத்துக் கொண்டார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் இவர்கள் சாப்பிட்ட பழம், காய்கறிகள், அரிசி, கீரைகள் உள்ளிட்ட இயற்கை உரங்களை கொண்டு விளைவிக்கப்பட்டன. இவை சீக்கிரம் காய்க்க வைக்க வேண்டும் என எந்த மருந்தையும் விவசாயிகள் போடவில்லை. ஆனால் இன்று நாம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை விட்டுவிட்டோம்.
அத்துடன் உடனே காய்த்து, உடனே பழுத்து, உடனே சாப்பிடும் ஹைபிரிட் முறைக்கு மாறிவிட்டோம். இதனால் சிறு குழந்தைகளுக்குகூட சர்க்கரை நோய், கண் பார்வை குறைபாடு, இளைஞர்களுக்கு ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. எனவே உணவு பொருட்களை ஆரோக்கியமானதாக உண்ண வேண்டும்.
நிறைய கலப்படங்கள் வந்துவிட்டன. தற்போது அரிசியில் கூட பிளாஸ்டிக் அரிசியை சேர்த்து விற்பனை செய்து வருகிறார்கள். இது பார்ப்பதற்கு நல்ல அரிசி மாதிரியே இருந்தாலும் இவற்றை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பிளாஸ்டிக் அரிசியை சாப்பிடுவதால் உடல்நல பிரச்சினைகள் ஏற்படும்.
ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அரிசியை போட வேண்டும், அதன் பிறகு அரிசி மேல் மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி என அர்த்தம். அடியிலேயே தங்கிவிட்டால் நல்ல அரிசி ஆகும். அது போல் வத்திக்குச்சி, அல்லது லைட்டரை கொண்டு சில அரிசிகளை எரிக்க வேண்டும். அரிசி எரிந்ததும் பிளாஸ்டிக் வாசனை வந்தால் அது போலியான அரிசி ஆகும். உண்மையான அரிசி எரிந்தால் பிளாஸ்டிக் வாசனை வராது. இப்படி கலப்படங்களை கண்டறிந்து அதிலிருந்து உங்கள் உடலை பாதுகாத்து கொள்ளுங்கள்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications