மட்டன் சாப்பிடறீங்களா.. மீன் வாங்க போறீங்களா? ஹோட்டலுக்கு போனதுமே "இதை" கவனியுங்க.. ரொம்ப முக்கியம்
சென்னை: மட்டன், சிக்கன், மீன் சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழக அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
கேரளாவில் கடந்த வரும் ஷவர்மா சாப்பிட்ட, 16 வயது சிறுமி உயிரிழந்தார்.. இப்போது 14 வயது நாமக்கல் சிறுமி இறந்துள்ளார்.. இதற்கெல்லாம் காரணம், இறைச்சியை முறையாக பதப்படுத்தப்படுவதில்லை, வேகவைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

2 சிக்கல்கள்: அதேசமயம், இது தொடர்பாக, 2 விதமான சிக்கல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. உணவகங்களில் அடிக்கடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.. உயிரிழப்புகள் நடந்தால் மட்டுமே, ஓட்டல்களிலும், இறைச்சி மார்க்கெட்டுகளிலும் சோதனைகள் நடத்தப்படுகிறதே தவிர, மற்ற நேரங்களில் இப்படியான சோதனைகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று பொதுமக்கள் அதிருப்தியுடன் கூறுகிறார்கள்.
அப்படியே அதிகாரிகள், உணவகங்களில் சோதனை நடத்தினாலும்கூட, மாதிரி செய்வதற்காக அந்த உணவுகளை கொண்டுசென்றாலும்கூட, போதிய அளவில், பகுப்பாய்வு கூடங்கள் இருப்பதில்லையாம்..
ஒரு மாதிரியை சேகரிக்க அனுப்பினால், 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது., அதனால்தான், உணவின் தரத்தை உறுதி செய்வதில், அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்..
அசைவ உணவகம்: இப்படிப்பட்ட சூழலில் ஒரு அதிரடி உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.. தமிழகம் முழுவதுமள்ள இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் சோதனை செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கவும், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகளும், உடனடியாக களப்பணியில் இறங்கி உள்ளனர்.
அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும், பொதுமக்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
பாக்டீரியாக்கள்: ஓட்டல்களில், சரியாக கறியை வேகவைக்காமல் போனால், ஷிகெல்லா, ஸ்டபைலோ காக்கஸ் ஆரியஸ், லிஸ்டீரியா மோனோசைப்டோஜீனஸ் போன்ற பாக்டீரியாக்கள் உருவாகி விடுகிறதாம்.. இதை சாப்பிடும்போது, அப்பாவி மக்கள் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
அதேபோல, உணவுகளில் கலக்கப்படும் கெமிக்கல், சமைக்க பயன்படுத்தப்படும் சுத்தமில்லாத தண்ணீரும், உடல்நல பாதிப்புக்கு காரணமாகின்றன.. உணவுப் பொருட்களை மோசமான இடங்களில் வைக்க கூடாது என்றும், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது வயிற்றிலிருந்து மூளை, நரம்பு மண்டலத்தை கூட பாதித்து விடும் என்றும் டாக்டர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.தெரிவிக்கின்றனர்.
வித்தியாச சுவை: உணவுகளை சாப்பிடும்போதே ஏதாவது வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக அந்த உணவை நாம் சாப்பிடாமல் தவிர்த்துவிட வேண்டுமாம். நாம் சென்று சாப்பிடும் ஓட்டல், சுத்தமாக இருக்கிறதா? குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் இடங்களில் பாக்டீரியா இல்லாத சுத்தமான இடங்களாக இருக்கிறதா? என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்கிறார்கள்.
இறைச்சியை பதப்படுத்துவதில் இருந்தே கவனமாக இருக்க வேண்டுமாம்.. இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, மறுநாள் அரைகுறை தீயில் சமைத்து சாப்பிடுவதே முதல் ஆபத்து என்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், இறைச்சியை, பிளாஸ்டிக் கவரில் காற்று புகாதவாறு அடைத்து, அதற்குபிறகுதான், ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டுமாம்.. அவைகளை சமைக்கும்போது, மொத்த இறைச்சியிலும் தீ பரவினால்தான், கறி முழுமையாக வேகும்..
5 மணி நேரம்: 5 மணி நேரம் வெளியே கம்பியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தாலும், பாக்டீரியாக்கள் அதில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதாம்.. அதனாலேயே பெரும்பாலான உடல் உபாதைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், அனைத்து இறைச்சி கடைகள், அசைவ ஓட்டல்களில் இறைச்சியை முறையாக பதப்படுத்துகின்றனரா? என்பதை ஆராய மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications