நாவல் பழம்.. நல்லது செய்யும் பழம்.. நாவல் ஜூஸ் ஒன்னு போதும், மொத்த நோயும் ஓடிரும்.. இதய நண்பன் நாவல்
சென்னை: சர்க்கரை நோயை விரட்டுவது முதல் பல் ஈறுகளை போக்குவது வரை பெரும்பலனை தரக்கூடியது நாவல் பழங்கள்.. எப்பவுமே நாவல் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாமாம்.. பழம் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி அல்லது அதுக்கப்புறம்தான் சாப்பிடணுமாம்.
புரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின்C, B, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இப்படி பல சத்துக்களை அடக்கியதுதான் நாவல் பழம்.. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த நாவல் பழம் பெரிதும் கை கொடுக்கிறது..

இதய பாதுகாப்பு: இதய நோய்கள் வராமல் தடுப்பதில் இந்த பழத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. காரணம், நாவல் பழத்தில் பொட்டாசியம் ஏராளமாக அடங்கியிருக்கிறது. அதாவது, 100 கிராம் நாவல் பழத்தில் 55 மில்லிகிராம் பொட்டாசியம் இருக்கிறதாம். எனவே, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்து நோய்களை நெருங்க விடாமல், தமனிகளை சீராக செயல்படவைக்க இந்த பழம் தூண்டுகோலாகிறது.
நாவல் என்றாலே நீரிழிவு நோய்தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் மிகச்சிறந்த வரப்பிரசாதம். இந்த பழம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.. அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் உள்ளிட்ட நீரிழிவு நோயின் அறிகுறியை இந்த பழம் குணப்படுத்துகிறது...
சர்க்கரை நோயாளிகள்: லோ கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்த இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும். இனிப்பின் அளவும் இந்த பழத்தில் மிகவும் குறைவு.. நீரிழிவு நோயாளிகள், இந்த பழத்தின் விதைகளை நன்றாக இடித்து துாளாக்கி, தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே நீரிழிவு நோய் குணமாகும்.
நாவல் பழத்தில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்தும் உடல் எடையை குறைப்போருக்கு மிகவும் உதவுகிறது.. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் இந்த பழம் உதவுகிறது.
நாவல் ஜூஸ்: நாவல் பழ ஜூஸில், சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்கு உடனே நின்றுவிடும்.. சிறுநீரக கற்களை கரைப்பதிலும் இந்த பழத்துக்கு பெரும் பங்குண்டு.. அதேபோல மூல நோய் உள்ளவர்கள், தினமும் 2 அல்லது 3 நாவல் பழம் சாப்பிட்டு வந்தால், 3 மாதங்களிலேயே மூல நோய் குணமாகுமாம்.
நாவல் பழத்திலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று எதிர்ப்பு, மலேரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருக்கின்றன.. அதனால், நாவல் பழத்தை சாப்பிட்டு வரும்போது, தொற்றுக்கள் எளிதில் நம்மை அண்டாது. ஞாபக சக்தியையும் அதிகரிக்கின்றது. ஈறுகள், பற்கள், பிரச்சனைக்கு நாவல் பழம் சாப்பிட்டாலே போதும்..!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications