துத்திக்கீரை.. தூள் கிளப்பும் துத்தி இலைகள்.. உடம்பெல்லாம் குளுகுளு துத்தி கீரை.. சபாஷ் "சக்கரகாய்"
சென்னை: மூலநோய் என்றாலே அதற்கு முதன்மையான மருந்தாக கருதப்படுவது இந்த துத்திக்கீரைகள்தான்.. அதேசமயம் மூலநோயை தவிர வேறு எந்த பிரச்சனைகளுக்கெல்லாம் இந்த துத்திக்கீரை பயன்படுகிறது தெரியுமா?
துத்தியின் இலைகளும், வேர்களும், பூக்களும், மட்டைகளும், மருத்துவ தன்மையை கொண்டவை. இதய வடிவத்தில் உள்ள இலைகள் தித்திப்பாக இருக்கும். காய்களில் சக்கரம்போல் காய்த்து கிடக்கும்.

மூலநோய்கள்: மற்ற கீரைகளை போலவே, பருப்புகளில் சேர்த்து, நல்லெண்ணெய், சின்ன வெங்காயம் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தாலே மூலநோய்கள் நம்மை அண்டாது..
அல்லது மூல நோய் வந்தவர்கள், இந்த கீரையை சுத்தம் செய்து, கழுவி, விழுதாக அரைத்து, வெறும் வயிற்றில் ஒரு வாரத்துக்கு ஒரு டம்ளர் குடித்தாலே மூலநோய் குணமாகிவிடும். இந்த இலைகளை கழுவி அரைத்து கஷாயம் போல அல்லது சூப் போல வைத்து குடித்தாலும் மூலநோய் குணமாகும். மூலச்சூடும் நீங்கிவிடும். அல்லது இந்த இலையில் ரசம் வைத்து சாப்பிடலாம்.
பாதிப்புகள் : விளக்கெண்ணெய்யில் இந்த இலையை வதக்கி எடுத்து, வாழையிலை அல்லது வெற்றிலையில் சேர்த்து கட்டி, மூலம் பாதிப்புகள் இருக்கும் இடத்தில் கட்டினால், எரிச்சல், வீக்கம், வலி, குத்தல் நீங்கும்.
எந்தவகையில் பயன்படுத்தினாலும், மூலத்தை விரட்டுவதில் முதன்மையானதாக துத்தி இலைகள் விளங்குகின்றன.. அதேபோல உஷ்ணம் சம்பந்தமான நோய்களையும் இந்த துத்தி இலைகள் விரட்டுகின்றன.. குறிப்பாக சிறுநீர் எரிச்சலை தணிக்கும் தன்மை இந்த இலைகளுக்கு உண்டு,.. குடல்புண்ணை ஆற்றும் சக்தி இந்த இலைகளுக்கு உண்டு.. உடலில் அதிக உஷ்ணம் சேர்ந்துவிட்டால், பசும்பாலுடன் இந்த துத்தி கீரையை பொடி செய்து கலந்து குடித்தாலே, மொத்த உஷ்ணமும் விலகிவிடும்.
கொப்புளங்கள்: உடம்பிற்குள் உண்டாகும் உஷ்ண கோளாறுகளை தவிர, சருமத்தில் ஏற்படும் உஷ்ண கோளாறுகளையும் இந்த துத்தி இலைகள் போக்குகின்றன.. உடலில் கட்டிகள், புண்கள், கொப்புளங்கள் ஏற்பட்டுவிட்டால், துத்தி இலைகளிலிருந்து சாறு எடுத்து, அதில் அரிசி மாவு சிறிது கலந்து, கட்டிகள் மீது கட்டினாலே போதும்.. அவைகள் பழுத்து உடைந்துவிடும்.
அதிக உஷ்ணத்தால், பெண்களுக்கு கருப்பையில் கோளாறுகள் ஏதாவது ஏற்பட்டாலும், மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்பட்டாலும், இந்த துத்தி இலைகளை, நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம்..
துத்தி இலைகள்: பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் பிரச்சனையும் இந்த இலை விரட்டுகிறது.. துத்தி இலை, துத்தி பூ, துத்தி காய், துத்தி வேர், துத்தி வேர் என அனைத்து பாகத்தையும் கஷாயம் போல வைத்து குடித்தால், ஆண்மை அதிகரிக்குமாம்..
ஆக, உடலில் ஏற்படும் வாய்ப்புண்கள், வயிற்று புண்கள், முதல் ஆசனவாய் புண்கள், மூல நோய் கட்டிகள், சிறுநீர் எரிச்சல் என ஒட்டுமொத்த உஷ்ணத்தையும் தணிக்கும் திறன் இந்த துத்தி இலைகளுக்கு உண்டு என்பதால், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த கீரைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications