செவ்வாழை.. மொத்த சத்துக்களின் சுரங்கம்.. செவ்வாழையை சாப்பிட்டா உடல்எடை கூடுமா? செவ்வாழையின் சீக்ரெட்
சென்னை: வாழைப்பழங்களில் பல்வேறு நன்மைகளை தருவது செவ்வாழை.. இந்த செவ்வாழையை தினமும் சாப்பிடலாமா? செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் எடை கூடுமா?
இந்த செவ்வாழைக்கு "குழந்தை பேறு தரும் பழம்" என்று பெயர் உண்டு.. ஏன் தெரியுமா? பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்தும் அத்தனை குணங்களும் செவ்வாழையில் உண்டு.. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் B6 கருவுறுதலின் விகிதத்தை அதிகரிக்க செய்வதுடன், கருமுட்டைகள் சிதையாமலும் பாதுகாக்கிறது.

செவ்வாழை: குழந்தைபேறு இல்லாத தம்பதிகள், தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், 40 நாட்களுக்குள் கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறதாம். அதேபோல, ஒருநாளைக்கு 2 செவ்வாழையை, 48 நாள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான நரம்புகள் பலம்பெற்று, ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும் என்கிறார்கள். இதற்காகத்தான், இந்த செவ்வாழைக்கு "குழந்தை பேறு தரும் பழம்" என்பார்கள்.
செவ்வாழையை பொறுத்தவரை, வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சிறுநீரகங்களில் கற்கள் சேராமல் தடுப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் பராமரிக்கிறது. இதனால், இதயம் சீராக செயல்படுவதுடன், பக்கவாதம், மாரடைப்புகள் வராமல் தடுக்கப்படுகிறது..
ரத்த அழுத்த பாதிப்பு: அதிக ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களுக்கும், தோல் பிரச்சனை இருப்பவர்களும், செவ்வாழை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நுரையீரல், கல்லீரல், இதயம், குடல், என முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்துக்கு பெரும் உதவி புரிகிறது இந்த செவ்வாழை.
தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பிரச்சனைகளே வருவதே கிடையாதாம்.. மாலைக்கண் பாதிப்பு இருப்பவர்களும், செவ்வாழையை சாப்பிடுவதால் பார்வை கூர்மைபெறும்.. அவ்வளவு ஏன்? இந்த செவ்வாழையை துண்டு செய்து, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தாலே கண் எரிச்சலும், கண்ணில் நீர் வழிதலும் நின்றுவிடும்.
எடை அதிகரிக்குமா: பெரும்பாலும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பார்கள்.. இந்த செவ்வாழையை அதிகம் சாப்பிட்டால் எடை கூடுமோ? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஆனால், மற்ற எல்லா வாழைகளையும்விட செவ்வாழை மிகச்சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.. காரணம், பொட்டாசியம், மக்னீசியம் இரண்டுமே இந்த செவ்வாயில் உண்டு. இந்த இரண்டுமே ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது.. இந்த இரண்டுமே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அதாவது, 2 வாரங்களுக்கு, தினமும் 1 செவ்வாழையை, சாப்பிட்டு வந்தால் நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை 10 மடங்கு உயருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. மலச்சிக்கலை போக்கக்கூடிய மிகச்சிறந்த மருந்து என்பதால், செவ்வாழையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications