வசம்பு வாசம்.. திருஷ்டிக்கு மட்டுமில்லீங்க.. இப்படியும் வசம்பு யூஸ் பண்ணலாம்.. அதென்ன வசம்பு ஆயில்
சென்னை: மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காலை நேரத்தில் என்ன உணவு சாப்பிடலாம் தெரியுமா? மூலத்தை போக்குவதில் வசம்புக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது தெரியுமா?
மூலநோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.. நீண்ட நாட்களாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் மூலநோய் வர வாய்ப்புள்ளது. அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும், அலர்ஜி பிரச்சனை இருப்பவர்களும் மூல நோய்க்கான வாய்ப்புகள் அதிகம்.

உணவு முறைகள்: அதிக காரமான உணவு, அதிகமாக வெயிட் தூக்குவது, குறைவான நார்ச்சத்து உணவு, இப்படி பல்வேறு வகைகளில் மூலநோய் ஆபத்துகள் நம்மை நெருங்குகின்றன.. இந்த மூலநோய் அதிகமாக இருந்தால் அல்லது ரத்தக்கசிவுகள் மூல நோய் பாதிக்கப்பட்டால், உடனடியாக தாமதிக்காமல் டாக்டரை சந்தித்து, முறையான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும்.
அதேசமயம் உணவில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். இதன்மூலம் உணவு எளிதில் ஜீரணமாகும்.. அதேபோல, எளிதில் ஜீரணமாக உணவுகளையே எடுத்து கொள்ளலாம்.. உஷ்ண பொருட்களை தவிர்த்துவிட்டு, குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட துவங்க வேண்டும்.. அதாவது, மலம் கழிப்பதில் எந்த சிரமமும் இல்லாதவாறு, உணவுமுறைகளை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
பழைய சாதம்: இதில், மூலநோய் தணிய, தினமும் காலையில் பழைய சாதம் குடிக்கலாம்.. இரவு மீதமாகும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி, சின்ன வெங்காயம், சிறிது கல் உப்பு போட்டு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை வெறும் வயிற்றில் இந்த பழைய கஞ்சியை 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், மூல நோய்க்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
இப்படி இரவு நேரம் தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டால், லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.. இதை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது, உடலிலுள்ள உஷ்ணங்கள் தணிந்துவிடும்.. மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் இந்த கஞ்சி தண்ணீர் செயல்படும்.. அல்சர் புண்களும் ஆறிவிடும்.. சிறுகுடலும் ஆரோக்கியம் பெறும்.. அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சி பெறும்.
நாட்டு மருந்து: அதேபோல, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்புவை வைத்தும் இதற்கு எளிய முறையில் தீர்வு காணலாம்.. பொதுவாக, பிறந்த குழந்தைகள் எந்த நோய் நொடியில்லாமல் இருப்பதற்காக இந்த வசம்பை கோர்த்து பிறந்த குழந்தைகளின் கைகளில் கட்டுவது உண்டு. இந்த வசம்பானது வசம்பு வேரானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வயிறு தொடர்பான பிரச்சனைகளை இந்த வசம்பு போக்கக்கூடியது.
வயிறு வீக்கம், வயிறு உப்புசம் பிரச்சனைகளுக்கு வசம்பை தீயில் சுட்டு தூளாக்கி, தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தருவார்கள்.. குழந்தைகளுக்கு பசியின்மை இருந்தாலும், இந்த வசம்புவை உள்ளுக்குள் மருந்தாக தருவார்கள்..
வசம்பு: ஆனால், மூலநோய்க்கும் இந்த வசம்புவை பயன்படுத்தலாம்.. வசம்பு பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.. இந்த பொடியை, நல்லெண்ணெய்யுடன் சேர்த்து கலக்க வேண்டும்.. பிறகு இதை லேசாக சூடு செய்து, ஒரு வெள்ளை துணியில் வைத்து கட்டிவிட வேண்டும்.
இப்போது இந்த துணியை பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் போல கொடுக்க வேண்டும்.. அப்போது, வெள்ளை துணியிலிருக்கும் எண்ணெய், பாதிக்கப்பட்ட இடத்தில் விழும்போது, நரம்புகள் சுருங்க தொடங்கும்.. இதற்கு பிறகு, ரத்தப்போக்கு படிப்படியாக நிற்கும். ரத்த நாளங்கள் இயல்பு நிலைக்கு வரும்வரை இப்படி இதமாக ஒத்தடம் செய்யலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications