சர்க்கரை நோயாளிகளே! 3 வேளையும் சாதம் சாப்பிடணுமா? கவலையை விடுங்க.. இந்த அரிசி இருக்க கவலை ஏன்?
சென்னை: உடலுக்கு மிகவும் நன்மையை பயக்கும் குள்ளக்கார் அரிசியின் பயன்கள் என்ன என தெரியுமா? இந்த அரிசியின் மூலம் என்னென்ன உணவு வகைகளை செய்யலாம் எனபதையும் தெரிந்து கொள்வோம்.
பாரம்பரிய அரிசி வகைகள் ஒவ்வொன்றாக தற்போது மீட்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன. நிறைய வகைகளில் அரிசிகள் உள்ளன. பொதுவாக நமக்கு தெரிந்து பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, குண்டு அரிசி, பாஸ்மதி அரிசி, பொன்னி அரிசி, நொய் உள்ளிட்டவைதான்.

ஆனால் பாரம்பரிய முறையில் நிறைய அரிசிகள் தற்போது பயிரிடப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன. அவற்றில் உடலுக்கு நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை 3 வேளை சாப்பிட்டாலும் உடல் நலனுக்கு எந்த பிரச்சினையும் வராது.
அந்த வகையில் நாம் குள்ளக்கார் எனும் அரிசி குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பார்க்கலாம். இது தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறது. குள்ளக்கார் அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலையும் நரம்பையும் வலுப்படுத்தும். இந்த அரிசியை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். இந்த அரிசி மூலம் செய்யப்படும் உணவு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
இந்த குள்ளக்கார் அரிசியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. அது போல் வெள்ளை அரிசியுடன் ஒப்பிடுகையில் ஜிங்க் அதிகமாக இருக்கிறது. அது ரத்த அழுத்தத்தை சீராக்கும். தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.
மூளை, நரம்புகள், உடலுக்கு ஆற்றலை தரும். குள்ளக்கார் அரிசியில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் இது ஜீரணிக்க தாமதமாகும். எனவே இந்த அரிசி எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பை வலுவாக்கும். மலச்சிக்கலை போக்கும்.
இந்த அரிசியை கொண்டு இட்லி, தோசை, புட்டு, சாலட், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், உப்புமா, கஞ்சி, அரிசி பாயாசம், கிச்சடி உள்ளிட்டவைகளை செய்யலாம். இந்த அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும் (சிகப்பு அரிசி வேறு, குள்ளக்கார் அரிசி வேறு நிறம் ஒன்றுதான்). இது முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளும். இந்த அரிசி மூளையை சுறுசுறுப்பாக்கும். இந்த அரிசி 100 முதல் 110 நாட்களில் வளரக் கூடியது. இது பட்டைத்தீட்டப்படாத அரிசியாகும். இந்த பயிர் 100 செ.மீ. உயரம் வளரக் கூடியது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications