பனிக்காலமா இருக்கே! முகக் கவசம் அணிவது பாதுகாப்பு தருமா? யாருக்கு அவசியம்?
சென்னை: முகக் கவசம் அணிவது பாதுகாப்பு தருமா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆம்.. சுவாசப்பாதை வழியாகப் பரவும் தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும். தற்போது இன்ஃப்ளூயன்சா, கொரோனா போன்ற வைரஸ்கள் பரவி வரும் சூழ்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தொற்று ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும்.

இதனால் தொற்றுப் பரவல் நடக்கும் வாய்ப்பு குறையும். யார் முகக்கவசம் அணிவதால் பாதுகாப்பு அதிகம் கிடைக்கும்? சளி இருமல் தும்மல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் "தொற்றைப் பரப்புபவர்கள்" இவர்கள் முகக்கவசம் அணிவதால் பிறருக்குத் தொற்றுப் பரவல் நடக்கும் வாய்ப்பு குறையும். முகக்கவசம் அணிவதால் தொற்று கொண்டவர்களிடம் இருந்து பரவும் "வைரஸ் எண்ணிக்கை" (வைரஸ் லோடு) குறையும். இதன் மூலம் தீவிர தொற்று ஏற்படும் வாய்ப்பு மட்டுப்படும்.
அதுவே சளி, இருமல், காய்ச்சல் தும்மல் இருப்பவர்கள் முகக்கவசம் அணியாமல் அவர்களை சுற்றி இருப்பவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தொற்றுப் பரவல் நடக்கும் வாய்ப்பு குறையாது. சரி... சளி இருமல் தும்மல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் எத்தனை நாட்கள் தொற்றைப் பிறருக்குப் பரப்பும் நிலையில் இருப்பார்கள்?
ஒருவருக்கு காய்ச்சல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பிருந்து அதற்குப் பின்பான 5 முதல் 7 நாட்கள் வரை பிறருக்குத் தொற்றுப் பரவல் நடக்கும். எனவே காய்ச்சல் ஏற்பட்டவர்கள் ஒரு வார காலம் முதல் பத்து நாட்கள் வரையாவது முகக்கவசம் அணிவது பிறருக்குத் தொற்றுப் பரவாமல் பாதுகாத்திட உதவும். முதியவர்கள், பல்வேறு இணை நோய்கள், கொண்டவர்கள் எதிர்ப்பு சக்தி குன்றியோர், கட்டாயம் வெளி இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
எனினும் மக்கள் நெருக்கடி அதிகமான இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் தரும் பாதுகாப்பு குறையும். எனவே சுவாசப் பாதை வைரஸ் தொற்றுகள் பரவும் காலங்களில் மக்கள் நெருக்கடி அதிகமான இடங்களுக்குச் செல்வதை முதியோர்கள்/ இணை நோய்கள் இருப்பவர்கள் தவிர்ப்பது நலம்.
பள்ளிகளுக்குச் செல்லும் சிறார் சிறுமியருக்கு மற்றவர்களிடம் இருந்து பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே பனிக்காலம் முடியுமட்டும் அவர்கள் முகக்கவசம் அணிவது ஓரளவு பாதுகாப்பு அளிக்கும். பொது சமூகமாக நாம் அனைவரும் முக்ககவசம் அணிவதன் மூலம் பல்வேறு இணை நோய்கள் கொண்ட மக்கள், முதியவர்களுக்கு தொற்றுப் பரவல் நடக்கும் வாய்ப்பைக் குறைத்திட முடியும்.
இதன் மூலம் அவர்களுக்கு தீவிர நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அறிந்து கொள்ள வேண்டிய செய்தி பனிக்காலம் முடியுமட்டும் பொது சமூகமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து பொது இடங்களில் சங்கமிப்பது தொற்றுப் பரவல் மட்டுப்படும். இதன் மூலம் பல்வேறு உயிர்கள் காக்கப்படும் என்பது திண்ணம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications