Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லிக்கு அரைக்கும்போது இதையும் கலந்து போடுங்க.. தோசை மாவு கரைக்கும்போது ஆப்ப சோடா யூஸ் பண்றீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இட்லி மிகச்சிறந்த உணவாக கருதப்பட்டாலும், 1 நாளுக்குமேல் இட்லி மாவை வைத்து பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.. இதற்கு காரணம் என்ன தெரியுமா? இரவு நேரத்தில் இட்லி, தோசையை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? இட்லிக்கு அரைக்கும்போது, சோடா மாவு பயன்படுத்துறீங்களா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பெரும்பாலும், புழுங்கல் அரிசி, உளுந்து இந்த 2 பொருட்களை மட்டுமே வைத்து இட்லி மாவு அரைக்கப்படுகிறது. இதற்கு காரணம், அதிகமாக உள்ள நார்ச்சத்துதான்..

பயறு வகை புரோட்டீன்களில் லைசின் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும், தானிய வகை புரதத்தில் மெத்தியோனைன் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும் இருக்கின்றன. எனவேதான், இட்லி, தோசைகளில் உளுந்து சேர்க்கப்படுகிறது. பொங்கல் செய்தாலும், அதில் பாசிப்பருப்பு சேர்க்கப்படுகிறது.

Idli Flour Idly Batter Baking Soda

உளுத்தம் பருப்பில் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்திருப்பதால், இதய ஆரோக்கியத்தை காக்கிறது.. கொழுப்பின் அளவு சீராகிறது.. பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சியை தடுக்க செய்கிறது. பற்கள், எலும்பு உறுதி பெறுகிறது.

கருப்பு உளுந்து சத்துக்கள்

அதேபோல, வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்து பயன்படுத்தலாம். காரணம், கருப்பு உளுந்து மேற்புற தோலின்மீது Leuconostec Mesenteroides என்ற பாக்டீரியா அதிகமாக உள்ளது. இதுதான் இட்லி மாவு புளிக்க மூலகாரணமாகும்.. இந்த கறுப்பு தோலை எடுத்துவிட்டு வெறும் வெள்ளை கலர் வெந்தயம் பயன்படுத்துவதால், புளிப்புத்தன்மை இல்லாமல் போகிறது. எனவே, மாவு புளிப்பதற்காகவே, தனியாக வெந்தயம் சேர்க்கப்படுகிறது. இதற்கு பதில், நேரடியாகவே கருப்பு உளுந்து பயன்படுத்தினால் கூடுதல் நார்ச்சத்து கிடைக்கும்.

சிலர் இட்லி மாவு கரைக்கும்போது, ஆப்ப சோடா சேர்ப்பார்கள்.. இட்லி உப்பலாக வரவேண்டும் என்பதற்காக ஒரு சிட்டிகையாக சேர்ப்பது உண்டு.. ஆனால், பேக்கிங் சோடா, உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்..

பேக்கிங் சோடா போடுறீங்களா?

ஆப்ப சோடாவிலுள்ள பாஸ்போரிக் அமிலம், செரிமானத்தை குறைப்பதுடன், ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் தடுத்து நிறுத்திவிடும்.. அதுமட்டுமல்ல, காரத்தன்மை கொண்ட பேக்கிங சோடா, ரத்தத்தின் காரத்தன்மையையும் மாற்றக்கூடியது. இந்த காரத்தன்மை அதிகமாகும்போது, சிறுநீரகம் செயலிழக்கலாம். சோடியம் பைகார்பனேட் உடல் வளர்சிதை மாற்றத்தையும், தசை உடலியலையும் பாதித்துவிடும்..

கல்லீரல் சர்க்கரையையும் கொழுப்பாக மாற்றிவிடும்.. பேக்கிங் சேடாவிலுள்ள பாஸ்போரிக் ஆசிட், எலும்புகளுக்கு பாதிப்பை உண்டுபண்ணி விடும். உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும். நோயெதிர்ப்பு செயல்பாடும் குறைந்துவிடும். எனவேதான், அளவுடன் சோடா மாவு பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.

ஒரு நாள் இட்லி மாவு

அதேபோல, 3 நாட்களுக்கு மேல் இட்லி மாவு பயன்படுத்தினால், அஜீரணம், அசெளகரியம் ஏற்படலாம். அதிலும், இதய நோய் உள்ளவர்கள் 3 நாட்களுக்கு மேல் இட்லி மாவை பயன்படுத்த கூடாது.. ஏனென்றால், பாக்டீரியாக்களின் வளர்ச்சி மாவில் அதிகமாக இருக்கும்..

அதிலும் ஒரே பாத்திரத்தில் இட்லி மாவை வைத்திருப்பதால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்... பிரிட்ஜில் வைத்தாலும்கூட, இவையெல்லாம் மாவை விட்டு நீங்காது.. இதனை சமைத்து சாப்பிடும்போது, நெஞ்செரிச்சல், குடல் தொடர்பான பிரச்சனை, பசியின்மை, தலைவலி, தூக்கமின்மை ஏற்படலாம். எனவே, இட்லி மாவு புளிக்காவிட்டாலும், அரைத்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+