இட்லிக்கு அரைக்கும்போது இதையும் கலந்து போடுங்க.. தோசை மாவு கரைக்கும்போது ஆப்ப சோடா யூஸ் பண்றீங்களா?
சென்னை: இட்லி மிகச்சிறந்த உணவாக கருதப்பட்டாலும், 1 நாளுக்குமேல் இட்லி மாவை வைத்து பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.. இதற்கு காரணம் என்ன தெரியுமா? இரவு நேரத்தில் இட்லி, தோசையை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? இட்லிக்கு அரைக்கும்போது, சோடா மாவு பயன்படுத்துறீங்களா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பெரும்பாலும், புழுங்கல் அரிசி, உளுந்து இந்த 2 பொருட்களை மட்டுமே வைத்து இட்லி மாவு அரைக்கப்படுகிறது. இதற்கு காரணம், அதிகமாக உள்ள நார்ச்சத்துதான்..
பயறு வகை புரோட்டீன்களில் லைசின் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும், தானிய வகை புரதத்தில் மெத்தியோனைன் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும் இருக்கின்றன. எனவேதான், இட்லி, தோசைகளில் உளுந்து சேர்க்கப்படுகிறது. பொங்கல் செய்தாலும், அதில் பாசிப்பருப்பு சேர்க்கப்படுகிறது.

உளுத்தம் பருப்பில் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்திருப்பதால், இதய ஆரோக்கியத்தை காக்கிறது.. கொழுப்பின் அளவு சீராகிறது.. பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சியை தடுக்க செய்கிறது. பற்கள், எலும்பு உறுதி பெறுகிறது.
கருப்பு உளுந்து சத்துக்கள்
அதேபோல, வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்து பயன்படுத்தலாம். காரணம், கருப்பு உளுந்து மேற்புற தோலின்மீது Leuconostec Mesenteroides என்ற பாக்டீரியா அதிகமாக உள்ளது. இதுதான் இட்லி மாவு புளிக்க மூலகாரணமாகும்.. இந்த கறுப்பு தோலை எடுத்துவிட்டு வெறும் வெள்ளை கலர் வெந்தயம் பயன்படுத்துவதால், புளிப்புத்தன்மை இல்லாமல் போகிறது. எனவே, மாவு புளிப்பதற்காகவே, தனியாக வெந்தயம் சேர்க்கப்படுகிறது. இதற்கு பதில், நேரடியாகவே கருப்பு உளுந்து பயன்படுத்தினால் கூடுதல் நார்ச்சத்து கிடைக்கும்.
சிலர் இட்லி மாவு கரைக்கும்போது, ஆப்ப சோடா சேர்ப்பார்கள்.. இட்லி உப்பலாக வரவேண்டும் என்பதற்காக ஒரு சிட்டிகையாக சேர்ப்பது உண்டு.. ஆனால், பேக்கிங் சோடா, உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்..
பேக்கிங் சோடா போடுறீங்களா?
ஆப்ப சோடாவிலுள்ள பாஸ்போரிக் அமிலம், செரிமானத்தை குறைப்பதுடன், ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் தடுத்து நிறுத்திவிடும்.. அதுமட்டுமல்ல, காரத்தன்மை கொண்ட பேக்கிங சோடா, ரத்தத்தின் காரத்தன்மையையும் மாற்றக்கூடியது. இந்த காரத்தன்மை அதிகமாகும்போது, சிறுநீரகம் செயலிழக்கலாம். சோடியம் பைகார்பனேட் உடல் வளர்சிதை மாற்றத்தையும், தசை உடலியலையும் பாதித்துவிடும்..
கல்லீரல் சர்க்கரையையும் கொழுப்பாக மாற்றிவிடும்.. பேக்கிங் சேடாவிலுள்ள பாஸ்போரிக் ஆசிட், எலும்புகளுக்கு பாதிப்பை உண்டுபண்ணி விடும். உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும். நோயெதிர்ப்பு செயல்பாடும் குறைந்துவிடும். எனவேதான், அளவுடன் சோடா மாவு பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.
ஒரு நாள் இட்லி மாவு
அதேபோல, 3 நாட்களுக்கு மேல் இட்லி மாவு பயன்படுத்தினால், அஜீரணம், அசெளகரியம் ஏற்படலாம். அதிலும், இதய நோய் உள்ளவர்கள் 3 நாட்களுக்கு மேல் இட்லி மாவை பயன்படுத்த கூடாது.. ஏனென்றால், பாக்டீரியாக்களின் வளர்ச்சி மாவில் அதிகமாக இருக்கும்..
அதிலும் ஒரே பாத்திரத்தில் இட்லி மாவை வைத்திருப்பதால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்... பிரிட்ஜில் வைத்தாலும்கூட, இவையெல்லாம் மாவை விட்டு நீங்காது.. இதனை சமைத்து சாப்பிடும்போது, நெஞ்செரிச்சல், குடல் தொடர்பான பிரச்சனை, பசியின்மை, தலைவலி, தூக்கமின்மை ஏற்படலாம். எனவே, இட்லி மாவு புளிக்காவிட்டாலும், அரைத்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும் என்கிறார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications