வாயில் வைத்ததும் புளிக்கும்! பிறகு துவர்க்கும்.. சூப்பரான புளிச்ச கீரை! கேன்சரை தடுக்கும் கோங்குரா
சென்னை: உயிர்க்கொல்லியான புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றல் புளிச்ச கீரைக்கு உண்டு. இதை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புளிச்ச கீரை, கோங்குரா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பொதுவாக கீரை என்றாலே உடல்நலனுக்கு நன்மையை கொடுக்கும். அதிலும் இந்த புளிச்ச கீரை உடலுக்கு பல்வேறு பலன்களை கொடுக்கிறது.

இந்த புளிச்ச கீரையில் புரதச்சத்து 1.7 கிராம் உள்ளது. இரும்பு சத்து 5 மில்லிகிராம், விட்டமின் சி 20 மில்லி கிராம், தையமின், ரிபோபிளேவின், நியாசின் உள்ளிட்டவைகளும் உள்ளன. இந்த கீரை நீளமான இலைகளை கொண்டிருக்கும். இதன் சுவை சற்று புளிப்பாகவும் துவர்ப்பாகவும் இருக்கும்.
இதன் மகத்துவம் தெரிந்தவர்கள் புளிச்ச கீரையை வாரத்திற்கு ஒரு நாளாவது சாப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த கீரை உடலுக்கு என்னென்ன நன்மைகளை கொடுக்கிறது என்பதை பார்ப்போம். இந்த கீரையை அதிக அளவில் சாப்பிடுவதால் உடல் செல்கள் வலுப்பெறும். இதனால் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
காலை வேளைகளில் மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் காலை உணவுகளை தவிர்க்கிறார்கள். அது போல் ஜங்க் ஃபுட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் காரமான உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு குடற்பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றன. இந்த புண்கள் உண்ட உணவு செரிமானம் செய்வதில் பிரச்சினையை கொடுக்கிறது.
அது போல் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் பிரச்சினைகள், அடிவயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும் மகிமை இந்த கீரைக்கு உண்டு. அது போல் தோல் வியாதிக்கு அருமருந்து. இந்த கீரையை அரைத்து சொறி, சிரங்கு இருக்கும் இடங்களில் தடவினால் அவை நீங்கும். ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
ரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது. அது போல் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதய நோய், பக்கவாதம் போன்ற நோய் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது. அத்துடன் இதய பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் கொலஸ்டிராலை அழிக்கும் சக்தி உள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. கருவுறுதலை மேம்படுத்தும். கண் பார்வை தெளிவு பெறும். சிறுநீர் தொற்றை நீக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். வாழ்நாள் நோய்களை தடுக்கும் ஆற்றல் இந்த புளிச்ச கீரைக்கு உண்டு. இந்த கீரைக்கு வெளிநாடுகளில் anti infertility herb என்ற பெயர் உண்டு.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications