ரஸ்தாளியை விடுங்க.. கற்பூரவள்ளி வாழையை எடுங்க.. பலே கற்பூர வாழை.. அனீமியாவை விரட்டும் பெஸ்ட் பழங்கள்
சென்னை: ரத்த சோகையிலிருந்து விடுபட உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா? இதில் தவிர்க்கவே முடியாதது கற்பூரவள்ளி வாழைப்பழமாகும். ஏன் தெரியுமா?
பொதுவாக, ஆண்களுக்கு 13 கிராம் விழுக்காடு குறைவாக ஹீமோகுளோபினும், பெண்களுக்கு 12 கிராம் விழுக்காடு குறைவாக ஹீமோகுளோபினும் உடலில் இருந்தாலே, அது ரத்த சோகை பாதிப்பாக கருதப்படுகிறது.

ரத்தசோகை: இந்த ரத்த சோகை வருவதற்கு பிரதான காரணம் இரும்புச்சத்து குறைபாடுதான். சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாததே இதற்கு மூல காரணமாகும்..
அதேபோல, வைட்டமின் B12, ஃபோலிம் அமிலம் குறைபாடுகள் காரணமாகவும் ரத்த சோகை ஏற்படலாம். எலும்பு மஜ்ஜை சரியாக செயல்படாவிட்டாலும் ரத்த சோகை வரலாம்.. மரபணு காரணங்களால் ரத்த செல்கள் அழிந்தாலும் ரத்த சோகை பாதிப்பு ஏற்படலாம்.
என்ன காரணம்: அதேபோல, உடலில் இதர பாதிப்புகள் காரணமாக ரத்தம் வெளியேறுவதாலும், ரத்த சோகை சோகை ஏற்படலாம். பெண்களுக்கு பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ரத்த போக்கு ஏற்படுவதால் ரத்த சோகை ஏற்படலாம்.
எனவே இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.. முருங்கைக்கரை உட்பட பச்சை காய்கறிகள் இதற்கு பலன் தருகின்றன.. காரணம், ஒரு மனிதனுக்கு தினமும் 15 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவையாக இருப்பதால், பழங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.. இதில், பேரீச்சை பழங்கள் அதிக பலன் தருகிறது.. மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்கள் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்..
வாழைப்பழம்: வாழைப்பழங்களையும் சாப்பிடலாம்.. இதில் கற்பூரவள்ளி வாழைப்பழத்திலும், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் B6, நார்ச்சத்துக்கள் உள்ளன. காலை உணவை சாப்பிட முடியாதவர்கள்கூட, இந்த ஒரு பழத்தை மட்டுமாவது சாப்பிட்டாலே போதும், ஆற்றலும், சுறுசுறுப்பும் அன்றைய நாளில் கிடைக்குமாம்..
இந்த கற்பூரவள்ளி சிறிய பழமாக இருந்தாலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் உள்ளதாலும், மாங்கனீசு, மெக்னீசியம் அடங்கியிருப்பதாலும், எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவை தருகிறது.
ரத்த சோகை: அதேபோல, ரத்தசோகை பிரச்சனையில் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதம் இந்த கற்பூரவள்ளி வாழைப்பழம்.. தொடர்ந்து இந்த பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தவிருத்தி அதிகமாகி, ஹீமோகுளோபின் பிரச்சைனையை விரட்டியடித்துவிடும்..!
நாவல் பழம்: அதேபோல, ரத்தத்தை உற்பத்தி செய்வதிலும் திராட்சை பழங்கள் பெரும் பங்காற்றுகின்றன.. விடாமல் திராட்சையை நாம் சாப்பிட்டு வரும்போது, ரத்தத்தில் உள்ள கெட்ட கூறுகள் நீங்குகின்றன.. அத்துடன், நல்ல ரத்தத்தை உற்பத்தி யாகின்றன.. நாவல் பழத்தையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்தமும் அதிகமாகும். தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் ரத்தம் பெருகும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications