Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது.. மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? காயத்ரி பற்ற வைத்த நெருப்பு - என்ன சொல்றாரு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தடுப்பூசி காரணமாக பலருக்கு மாரடைப்பு வருவதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் இது தொடர்பாக சந்தேகத்தை கிளப்பும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவலின் வேகம் தற்போது குறைந்தாலும், அதன் பிறகு ஏற்படும் மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயது மாரடைப்புகள் அதிகளவில் ஏற்பட்டு பலரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாரடைப்புகள் ஏற்படுவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Gayathri Raghuram conspiracy on Covid vaccine is the reason for heart attack

அதே சமயம், கொரோனா தடுப்பூசி காரணமாக மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றன. சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் மக்கள் மீது கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டதாலேயே இந்த விபத்துகள் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள். ஆனால், இதை அரசும் மருத்துவர்களும் மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக சந்தேகம் கிளப்பும் வகையில் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் காயத்ரி ரகுராம். அதில், "கரோனாவுக்குப் பிறகும், தடுப்பூசிக்குப் பிறகும், தடுப்பூசியின் எண்ணிக்கையால் இறக்கிறார்களா இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. இளைஞர்கள், வயதான ஆண்கள் மற்றும் சில பெண்கள் அதனால் மாரடைப்பால் இறக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.

Gayathri Raghuram conspiracy on Covid vaccine is the reason for heart attack

தடுப்பூசி காரணமாக என்று எந்த செய்தியும் இல்லை. ஆனால் அரசாங்கம் பொது மக்களை எச்சரித்து அவர்களை பொதுச் சோதனைக்குக் கோருகிறதா? தடுப்பூசிகள் காரணமா என்று சொல்ல அவர்களுக்கு தைரியம் இருக்குமா? அதற்கு கொரோனா அல்லது தடுப்பூசி அல்லது இயற்கை மரணம் காரணமாக இருக்கலாம், மரணம் இன்னும் மரணம்தான். தடுப்பூசி நம்மை காப்பாற்றியதா? அதன் பிறகு நமக்கு கோவிட் வரவில்லையா? சொல்லப்படாத பல பதில்கள் உள்ளன.

பலருக்கு இப்போது கோவிட் அல்லது தடுப்பூசிக்குப் பிறகு பிரச்சனை உள்ளது. சில உறுப்புகள் பாதிக்கப்படும். மருத்துவமனைகளுக்கு செல்ல பயப்படுகிறோம். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் உள்ளது. ஏனென்றால், நாம் நமது நகரத்தை சுத்தமாக வைத்திருக்கவில்லை மற்றும் மழையில் தண்ணீர் தேங்க அது அழுக்காகிறது. ஒவ்வொரு இடமும் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் நமது ஆரோக்கியத்தை பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆரோக்கியமே செல்வம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+