Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரோக்கியம் தரும் ஆடாதோடை இலைகள்.. நெஞ்சு சளி, மூலநோய், வீக்கத்தை போக்கும் ஆடாதொடை மூலிகை பவுடர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடாதொடை இலைகளின் பயன்கள் என்னென்ன தெரியுமா? சுவாச கோளாறுகளை தவிர வேறு எந்தெந்த உடல்நல பிரச்சனைகளுக்கு இந்த ஆடாதோடை இலைகளை பயன்படுத்தலாம்? மூலநோய்க்காரர்களுக்கு மருந்தாகும் இந்த இலைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

ஆடுகள் இந்த செடியின் இலையை மட்டும் சாப்பிடாதாம்.. அதனால்தான், ஆடு தொடாத இலை, அதாவது "ஆடு தொடா" என்று பெயர் வந்ததாக சொல்வாரகள். பாரம்பரிய வைத்தியத்தில், இந்த மூலிகைக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. அதேபோல, சித்த மருத்துவத்தில், காய்ச்சல் தீருவதற்கு குடிநீர் வகைகளில், இந்த ஆடாதோடை இலைகளைதான் சேர்க்கிறார்கள்.

adathodai herbs adhatoda leaves herbal powder


நுரையீரல்:
நுரையீரலின் பாதுகாவலன் இந்த ஆடுதோடை இலைகள் என்று சொல்லலாம். இதற்கு காரணம் வாசிசின் என்ற வேதிப்பொருள் இந்த மூலிகையில் உள்ளது. இந்த செடி வளரும் இடங்களில் எல்லாம், கார்பன்டை ஆக்ஸைடை உள்ளிழுத்து கொண்டு, ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும். இது மனித குலத்துக்கே ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.

ஆஸ்துமா, இருமல், எப்போர்ப்பட்ட சளியையும் விரட்டிவிடும் இந்த கசப்பு இலை. இதற்கு இந்த இலைகளை நிழலில் காயவைத்து பவுடராக்கி, மெல்லிய வெள்ளை துணியில் சலித்து கொள்ள வேண்டும்.. இதில் 1 ஸ்பூன் வீதம் 3 வேளை, 6 மாத காலம் சாப்பிட்டு, வெந்நீரை குடித்துவந்தால், நுரையீரலில் உள்ள தொந்தரவுகள், சைனஸ் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனை அத்தனையும் வேரோடு விலகும்.

ரத்த அழுத்தம்: இந்த பவுடர் ரத்த அழுத்தத்தையும் சீராக்கும்.. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த ஆடாதோடை இலைகள் அருமருந்தாகும்.. ரத்தத்தை சுத்திகரிப்பதில் இந்த மூலிகைக்கு நிறைய பங்கு உள்ளது.

காசநோய் இருந்தாலும் பறந்துவிடும். 48 நாட்களுக்கு இந்த ஆடாதோடா இலையை சாப்பிட்டால், T.B விலகும் என்பார்கள்.. அதனால்தான் கொரோனா நேரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை இந்த இலைகள் நமக்கு தந்திருந்தன. அதனால்தான், எல்லாவகையான இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்தே தயராகின்றன. மலேரியா ஜூரத்துக்கு மருந்தாகவும் இந்த இலைகள்தான் பயன்படுத்தப்படுகிறது .

ஜூரம்: டெங்கு ஜூரத்தில் குறையும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை, இந்த இலைகளுக்கு இருக்கிறது. எனவே, ஜூரத்தின்போது, ஒன்று அல்லது இரண்டு ஆடாதொடை இலைகளை மையாக அரைத்து, சுத்தமான தேன் கலந்து உட்கொண்டுவந்தால், சுரத்தைக் குறைப்பது, ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சளி, இருமல் போன்ற நோய்கள் அனைத்தும் குணமாகும்.

நெஞ்சில் சளி கட்டியிருந்தால், இந்த இலையை பறித்து, நெருப்பில் போட்டு, அந்த புகையை சுவாசித்தால் போதும், நெஞ்சிலுள்ள சளி கரைந்துவிடுமாம் ஆடாதோடை இலையை தூள் செய்து, வெறும் தண்ணீரில் கலந்து குடித்தால் தசைவலிகள் நீங்கிவிடும். வயிற்றில் பூச்சிகள் இருந்தால், இந்த இலைகள் அதனை நீக்க உதவுகின்றன.

உதிரப்போக்கு: பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், ஆடாதொடை இலைகள் உதவுகின்றன.. ஆடாதொடை இலைகளை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டால், அதிக உதிரப்போக்கு நின்றுவிடும். கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல், இந்த செடியின் வேரை கஷாயம் தயாரித்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பார்கள்.. இதனால் கர்ப்பப்பையையும் உறுதியாகிறது..

இதன் இலைகளை விளக்கெண்ணெயில் லேசாக வதக்கி தசைப்பிடிப்பிருக்கும் இடங்களில் ஒற்றடம் கொடுக்கலாம். வீக்கத்தைக் கரைக்கும் திறன் இருப்பதால் மூட்டுகளில் உண்டாகும் வீக்கங்களைக் கரைக்க அவ்விடத்தில் இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி பற்று போடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+