Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருங்கை பட்டை.. முருங்கை மரம் ஒன்று போதும்.. ஓராயிரம் பிரச்சனை தீரும்.. முருங்கை பட்டை மூலிகை பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது" என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு காரணம், முருங்கையில் மட்டும் எந்த பகுதியுமே வீண் கிடையாது.. அதனால்தான், அன்றைய வீடுகளில், வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் கட்டாயம் வளர்த்து வைத்திருப்பார்கள்.

முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் என அடிப்பாகம் முதல் இலைகள் வரை அவ்வளவும் மருத்துவ பொக்கிஷங்கள் அடங்கி உள்ளன.

 Health Benefits of Drumstick Bark Do you know that Drumstick Trees are the Excellent Medicine for all

முருங்கை பட்டை: இதில் முருங்கை பட்டையானது, முழுக்க முழுக்க வைத்தியத்துக்கு பயன்படுத்தக்கூடியது.. பெரும்பாலும், முருங்கை பட்டையை உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்வார்கள். தலைவலி, காய்ச்சலுக்கு, மூட்டுவலி போன்றவைகளுக்கு பட்டை பொடி பலனை தரும். நரம்புக் கோளாறு இருப்பவர்கள், முருங்கை பட்டையை வாரத்தில் ஒருநாளாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

முருங்கை வேர் + பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் என்கிறார்கள்.

சரும பிரச்சனைகள்: முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும். அதேபோல, இந்த பட்டையை இடித்து வீக்கங்கள், கட்டிகள், புண்கள் மீது வைத்து கட்டினால், வீக்கம் குறையும்... கட்டியும் கறையும்.. காதுவலி இருப்பவர்களுக்கு முருங்கை பட்டை நல்ல தீர்வை தரும்..

அல்லது முருங்கை பட்டையிலிருந்து சாறு போல எடுத்து, அதனுடன் குப்பைமேனி சாறும் கலந்து, எண்ணெய் விட்டு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டால், முதலுதவியாக பயன்படும். உடலில் எங்கு அடிபட்டாலும் இந்த எண்ணெய்யை பூசலாம். அல்லது, சொறி சிரங்குகள் மீதும் தடவிவரலாம்..

முருங்கை பட்டை: இந்த பட்டையின் மேலுள்ள தோலை நீக்கிவிட்டு, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த தண்ணீர், பலவித பிரச்சனைகளையும் சரிசெய்யக்கூடியது..

உள்ளுறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.. ரத்தத்தை சுத்திகரிக்க செய்கிறது.. அதனால், ரசம் அல்லது சூப் போல செய்து மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் பறந்துவிடும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.. வயிற்றில் புண் இருந்தாலும் ஆற்றிவிடும்..!!

பட்டை தண்ணீர்: முருங்கை பட்டையை நன்றாக இடித்து மண்சட்டியில் போட்டு, தண்ணீர் மட்டுமே சேர்த்து, சுண்ட காய்ச்சி கசாயமாக எடுத்து வைத்துக் கொண்டால், இன்னும் பன்மடங்கு பலன்தரும்.. வலிப்பு நோய் நம்மை எட்டிக்கூட பார்க்காதாம்.. இப்படி பல பலன்களை தரும் முருங்கை பட்டையை, மருத்துவர்களின் உதவியுடன் பயன்படுத்தி வந்தால், ஆரோக்கிய வாழ்வை எளிதாக பெறலாம்!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+