வெறும் 30 நாளைக்கு "சர்க்கரை" இல்லாமல் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? இழுக்கும் வெள்ளை சர்க்கரை
சென்னை: வெள்ளை சர்க்கரை இல்லாமல் பழகிக்கொள்ள முடியுமா? 30 நாட்கள் சர்க்கரையை உணவில் பயன்படுத்தாமல் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?
இனிப்பாக உள்ளது எல்லாமே சர்க்கரை கலந்த பொருள் என்றோ, அல்லது சத்து என்று கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.. சர்க்கரை சத்து என்பது இயற்கையாகவே சில உணவுகளில் அடங்கி உள்ளது.

இயற்கை தித்திப்பு: குறிப்பாக, பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் இப்படி பல பொருட்கள் தித்திப்பாக இருக்கும்.. ஆனால், இவையெல்லாம் இயற்கையான சர்க்கரைகளாகும். நமக்கு ஆரோக்கியத்துக்கு தேவையான சர்க்கரையாகும்.
ஆனால், வெள்ளை சர்க்கரையை நாம் நேரடியாக உட்கொள்ளும்போதுதான், அது பல பிரச்சனைகளை கொண்டுவந்துவிடுகிறது. குறிப்பாக, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், அதிலும், டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்தை அதிகமாகிறது, பல் சொத்தை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, குடல்புண், சளித்தொல்லை, இதய நோய், ரத்தம் அழுத்தம், புற்றுநோய் என சிறிய பிரச்சனை முதல் பெரிய பெரிய நோய்கள் வரை வரக்கூடிய வாய்ப்புள்ளது.
கல்லீரல்: இங்கு கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறிப்பிட வேண்டி உள்ளது.. இந்த சர்க்கரையில் "பிரக்டோஸ்" நிறைய உள்ளதால், உடலில் கொழுப்பை உருவாக்க இதுதான் துணைபுரிகிறது.. அதனால், சர்க்கரையை நாம் அதிகம் எடுத்து கொள்ளும்போது, கல்லீரலில், கொழுப்பு அமிலங்களை உருவாக்கிவிடும். இதுவே கல்லீரலை நேரடியாக சேதப்படுத்தகூடிய அடிப்படை காரணமாகும்..
அதைவிட முக்கியமாக, உணவில் அதிக அளவில் சர்க்கரை கொண்டவர்கள், தங்களது உணவில் குறைந்த அளவு சர்க்கரை கொண்டவர்களை காட்டிலும், இதய நோய்களால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. அதனால், இதயத்துக்கும் சர்க்கரைக்கும் நேரடி தொடர்பு உள்ளதால், சர்க்கரையை குறைத்து, இதயத்தை காக்க வேண்டி உள்ளது.

பழக்கம்தான் காரணம்: இதற்கு முக்கியமான காரணம், சர்க்கரையில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்ற ரசாயனம்தான், மஞ்சள் கலராக மாறி, விஷமாக மாறிவிடுகிறது. அதுவும் இல்லாமல் இந்த சர்க்கரையில் எந்தவித கலோரிகளும் இருப்பதில்லை.. அதனால், சர்க்கரையை தவிர்க்க சொல்கிறார்கள்.. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், நாளடைவில் இது பழகிவிடும்..
ஜஸ்ட் ஒரு மாத காலம், சர்க்கரை இல்லாமல் பழகிகொண்டால், அதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா? கலோரியின் அளவு வெகுவாக குறைய துவங்கும்.. உடல் எடை குறைய துவங்கும்.. கொழுப்புகள் கரைய துவங்கும்..
கசப்பு + துவர்ப்பு: பற்களும் வலுவாகும்.. உடலில் ஆற்றலின் அளவு அதிகரிக்கும்.. கல்லீரல் பாதுகாக்கப்படும்.. சரும ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.. இதனால் முதுமை சுருக்கம் தள்ளிப்போடப்படும். தித்திப்பு சுவையில் எந்த ஒரு பலனும் இல்லாத நிலையில் கசப்பு, துவர்ப்பு சுவையில் எல்லா பலன்களும் நிறைந்துள்ளதையும், இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications