பிளேட்லெட்டை அதிகரிப்பது முதல் கேன்சரை தடுப்பது வரை.. பப்பாளி இலை சாற்றை செய்வது எப்படி?
சென்னை: ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளை அதிகரிக்கும் மாயாஜாலம் கொண்ட பப்பாளி இலைகளின் சாற்றை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
டெங்கு காய்ச்சல் வந்தாலோ இல்லாவிட்டால் வேறு சில காரணங்களாலோ ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் பல பிரச்சினைகள் எழும். அதாவது ரத்தக் கசிவை நிறுத்த முடியாத நிலை ஏற்படும்.
உடலின் உள்ளுறுப்புகளில் இருந்தும் தோலுக்கு அடியில் இருந்தும் ரத்தக் கசிவுகள் நடக்கும். அது போல் பல் தேய்க்கும் போது ஈறுகளில் இருந்து ரத்தம் கசிந்தாலும் அதை நிறுத்துவது கடினம். பிளேட்லெட் கவுண்ட் குறைந்தால் மாதவிடாய் ரத்த போக்கும் அதிகரிக்கும்.

உடல் சோர்வாக இருக்கும். மலம், சிறுநீரில் ரத்தம் கசியும். உடலில் ஆங்காங்கே படைகள் ஏற்படும். உடலில் காயம் ஏற்பட்டால் நீண்ட நேரமாக ரத்தம் வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சினைகளுக்கு ஆங்கில மருந்துகள் இருந்தாலும், இயற்கையான முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பிளேட்லெட் கவுன்ட்களை அதிகரிக்கலாம்.
அதற்கு பப்பாளி இலை சாறு உதவுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என்றால், 2 முதல் 4 பப்பாளி இலைகளை தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு அதில் உள்ள நரம்புகளை எடுத்துவிட்டு , இலைகளை சிறிய துண்டுகளாக போட வேண்டும். பிறகு 200 மில்லி தண்ணீரில் இந்த இலைகளை போட்டு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு சேர்க்க வேண்டும்.
அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து செய்ய வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 100 மில்லியாக குறையும். அப்போது வடிகட்டி ஆற வைத்து அதை குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 100 மில்லி வரை மட்டுமே குடிக்க வேண்டும். இது பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு என்றால் 25 மில்லி முதல் 50 மில்லி வரை இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கொடுக்கலாம்.
இந்த பப்பாளி இலைகள் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்தலாம். ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஆன்டி இன்ஃபிளமேட்டரி இருப்பதால் தோலில் உள்ள தடிமன்கள் (rashes), தசை வலி, மூட்டு வலி, உள்ளிட்டவை குணமாகும். முடியின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானதாகும். தோலின் ஆரோக்கியத்தை காக்கிறது. கேன்சரை உருவாக்கும் செல்களை அழித்தும் அந்த நோய் வராமலும் பாதுகாக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சாற்றை அருந்தினால் நோயின் வீரியம் குறைகிறது என்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications