தோசைக்கு மாவு அரைக்க போறீங்களா? இந்த கொண்டைக் கடலையையும் சேருங்களேன்! வெரி ஹெல்தி!
சென்னை: சதா இட்லியும் தோசையும் செய்து போர் அடித்துவிட்டதா, அப்படியென்றால் இந்த கொண்டைக்கடலையில் ஒரு ரெசிபி செய்து பாருங்கள். புரதச்சத்தும் கிடைக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் ஏறாமல் இருக்கும்.
தினமும் காலையும் இரவும் இட்லி, தோசை, இதை விட்டால் பொங்கல், அதையும் விட்டால் இந்த பாழாய் போன உப்புமா என புலம்பாத ஆண்களே இருக்க மாட்டார்கள். சப்பாத்தி, பூரி எல்லாம் வார இறுதி நாட்களில்தான் கிடைக்கும்.

இயந்திரத்தனமான வாழ்வியல் முறையில் நேரத்தை மிச்சப்படுத்த என்னெல்லாம் செய்யலாம் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறதே தவிர வேறு எதையும் புதிதாக செய்ய தோன்றுவதில்லை.
இட்லி, தோசையில் அரிசி இருப்பதால் அவற்றில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனால் இதை உண்ண சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. மேலும் குழந்தைகளுக்கும் தேவையான புரதச்சத்து தேவைப்படும் என்றால் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.
அதாவது அரிசிக்கு பதில் சிறு தானியம் அல்லது பாரம்பரிய அரிசியை கொண்டு தோசையை தயாரிக்கலாம். அவற்றுடன் உளுந்துக்கு பதிலாக கருப்பு கொண்டை கடலை அல்லது வெள்ளை கொண்டை கடலையை உபயோகிக்கலாம். இவற்றில் புரதச் சத்து இருக்கிறது.
இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கருப்பு அல்லது வெள்ளை கொண்டை கடலை - 1 கப்
இட்லி அரிசி அல்லது பாரம்பரிய அரிசி அல்லது சிறுதானியம்- அரை கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி- சிறிய துண்டு
சீரகம்- அரை டீஸ்பூன்
கொத்தமல்லி- கைப்பிடி அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
கொண்டை கடலையையும் அரிசியையும் (எந்த அரிசியாக இருந்தாலும் சரி) நன்கு கழுவி 8 முதல் 10 மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை கொண்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாவை புளிக்க வேண்டும் என அவசியம் இல்லை. தேவைப்பட்டால் புளிக்க வைத்துக் கொண்டு பிறகு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, தோசை கல்லில் ஊற்றி நெய் அல்லது வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வார்த்து எடுக்கவும். இதற்கு தொட்டுக்க எதுவும் தேவையில்லை. தேவைப்பட்டால் கார சட்னி, அல்லது கடலை சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
கொண்டைக் கடலையில் நார்ச்சத்துகள் உள்ளன. இதை உட்கொண்டால் ஜீரண உறுப்புகள் மற்றும் குடலின் ஆரோக்கியம் மேம்படும். கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மேம்படும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications