அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனின் போது 7 வார குழந்தைக்கு இதயதுடிப்பு இருக்காதது ஏன் தெரியுமா?
சென்னை: அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போது கருவில் இருக்கும் 7 வாரம் 6 நாட்களேயான குழந்தைக்கு இதயதுடிப்பு இல்லை என மருத்துவர்கள் சொல்வதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் திவ்யா அருள் என்பவர் கூறியிருப்பதாவது: அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போது கருவிலிருக்கும் 7 வாரம் 6 நாட்களான சிசுவிற்கு இதயத்துடிப்பு இல்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? இது மிகவும் சங்கடமான ஒரு நிலை ஆகும்.

பொதுவாக இது போன்று உருவாகிய கருவிற்கு எட்டு வாரங்கள் வரை இருதயத் துடிப்பு வராமல் போனாலும்
அல்லது ஏற்கெனவே தென்பட்ட கருவின் இருதயத் துடிப்பு அடுத்தடுத்த அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் போது தெரியாமல் மறைந்து போவதுமுண்டு.
NO FETAL POLE SEEN . ONLY EMPTY SAC SEEN..NO CARDIAC ACTIVITY SEEN என்று சொல்வார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது.. கருத்தரித்த பெண் சரியான ஓய்வு இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அதிக நேரம் ட்ராவல் செய்யும் போது கர்ப்ப வாய் உறுதியாக இல்லை என்றால் SPOTTING என்ற சிறிதளவு இரத்தக்கசிவு ஏற்படும்.
எட்டு வாரத்திற்கு உள்ளே இருக்கும் கருவின் உட்பகுதிகள் இரத்தக் கசிவாக வெளியேறிவிடும். கருத்தரித்த பெண்ணிற்கு தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் நீரிழிவு பிரச்சினை இருக்கும் போது அதற்கான மாத்திரைகளை சரிவர எடுக்காமல் இருக்கும் போது அந்த கரு சரியாக வளர்ச்சி அடையாது. இது போல இருதயத் துடிப்பு இல்லாமல் போய்விடும்.
கருத்தரித்த பெண்ணிற்கு போதிய அளவு ஃபோலிக் ஆசிட் சத்து இல்லாமல் இருப்பது.. அதிக இரத்த சோகை இருப்பதினாலும் உருவாகும் கருவின் ஆரோக்கியம் சரியாக இருப்பது இல்லை.. சொந்தத்தில் திருமணம் செய்தவர்கள் என்றால் கிட்டத்தட்ட தொடர்புடைய மரபணுவை கொண்ட விந்தும் முட்டையும் சேரும் போது அவை குறைபாடு கொண்ட கருவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியமான கரு உண்டானால் மட்டுமே ஆரம்ப கால கர்ப்பத்தில் காணப்படும் பீட்டா ஹெச்ஸிஜி ஹார்மோன் சீராக இருக்கும்.
ப்ரஜஸ்டீரான் ஹார்மோன் சரியாக சுரந்து இரத்தக்கசிவு இல்லாமல் கருவைக் காப்பாற்றும்.. தற்போது.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ப்ரஜஸ்டீரான் ஊசி மற்றும் ஃபோலிக் ஆசிட் மருந்துகள் மற்றும் பீட்டா ஹெச்ஸிஜி ஊசிகளும் கொடுத்து காத்திருக்கச் சொல்வார்கள் மருத்துவர்கள்.
இன்னொரு ஸ்கேன் சென்டரில் அல்ட்ரா சவுண்ட் செய்து கருவின் பாதிப்பை உறுதி செய்யவும் இன்னொரு மகப்பேறு மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்..
அப்படி ஒருவேளை அடுத்த வார அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் இதயத் துடிப்பு இல்லாத பட்சத்தில் தாயின் உடல் நலம் கருதி கருவின் பாகங்களை வெளியேற்றுவதே சிறந்தது.
அடுத்த முறை கர்ப்பம் தரிக்கும் முன்பு.. மகப்பேறு மருத்துவர் ஆலோசனை பெற்று மூன்று மாதங்கள் முன்பு இருந்தே போதிய ஃபாலிக் ஆசிட் சத்து மாத்திரைகள் மற்றும் புரதச்சத்து;இரும்புச்சத்து ;கால்சியம் நிறைந்த உணவுகளை தந்து பெண்ணின் ஆரோக்கியத்தை மீண்டெடுக்க வேண்டும்..
அதன் பிறகே அடுத்த கர்ப்பம் தரிப்பதற்கு அந்த பெண் மனதளவில் உடலளவில் தயாராக இருப்பார்கள். மன அழுத்தம் பெண்ணுக்கு அதிகமாக இருக்கும்.. போதிய கவுன்சலிங் கொடுக்க வேண்டும்.
அதுவும் முதல் கர்ப்பம் என்றால் எல்லாப் பெண்களுக்கும் கடும் மன உளைச்சல் ஏற்படும்.. ஆனால் இந்த குறைபாடு கொண்ட கருவை பெற்று எடுக்க இயலாது என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆறுதல் அளிக்கவும் என அந்த பதிவில் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications