Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபாயகரமான நிலையில் புதுக்கோட்டை.. 229ஐ தொட்ட டெங்கு பாதிப்பு! ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: டெங்கு காய்ச்சல் காரணமாக புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்து இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் டெங்கு பாதிப்பு அந்த மாவட்டம் முழுவதும் தீவிரமடைந்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ஒரே நாளில் 59 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

Pudukottai faces severe Dengue spread over 229 people infected

தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200 ஐ தாண்டி இருக்கிறது. டெல்லி காய்ச்சலால் மட்டும் பாதிக்கப்பட்டு 229 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

500 க்கும் அதிகமான டெங்கு தடுப்பு பணியாளர்கள் புதுக்கோட்டையில் கண்காணிப்பு பணிகளிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகள், காலி இடங்களில் தேங்கும் நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பு அதிகரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வீடுகள் தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தி, பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

டெங்கு பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் பணியாளர்கள் கூடுதலாக டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காய்ச்சல் அறிகுறியுடன் வரும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து உரிய பரிசோதனை செய்து அதன்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கும் சுகாதாரத் துறையினர், தனியார் மருந்து கடைகளில் காய்ச்சல் மருந்து வாங்கி உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

புதுக்கோட்டை போல் மதுரையில் மேலும் 13 பேருக்கு டெங்கு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிப்பு 100 ஐ தாண்டி இருக்கிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழலில், காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றும், சாலைகள், காலி இடங்களில் தண்ணீரை தேங்கவிடாமல் தவிர்க்க அரசு நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+