அபாயகரமான நிலையில் புதுக்கோட்டை.. 229ஐ தொட்ட டெங்கு பாதிப்பு! ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்
புதுக்கோட்டை: டெங்கு காய்ச்சல் காரணமாக புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்து இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் டெங்கு பாதிப்பு அந்த மாவட்டம் முழுவதும் தீவிரமடைந்து இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ஒரே நாளில் 59 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

தற்போது டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200 ஐ தாண்டி இருக்கிறது. டெல்லி காய்ச்சலால் மட்டும் பாதிக்கப்பட்டு 229 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
500 க்கும் அதிகமான டெங்கு தடுப்பு பணியாளர்கள் புதுக்கோட்டையில் கண்காணிப்பு பணிகளிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகள், காலி இடங்களில் தேங்கும் நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பு அதிகரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வீடுகள் தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தி, பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
டெங்கு பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் பணியாளர்கள் கூடுதலாக டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காய்ச்சல் அறிகுறியுடன் வரும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து உரிய பரிசோதனை செய்து அதன்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கும் சுகாதாரத் துறையினர், தனியார் மருந்து கடைகளில் காய்ச்சல் மருந்து வாங்கி உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
புதுக்கோட்டை போல் மதுரையில் மேலும் 13 பேருக்கு டெங்கு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிப்பு 100 ஐ தாண்டி இருக்கிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழலில், காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றும், சாலைகள், காலி இடங்களில் தண்ணீரை தேங்கவிடாமல் தவிர்க்க அரசு நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications