வெள்ளை போக்கு, கேன்சர் தொற்றை ஒழிக்கும் பூசணி விதையின் பவுடர்.. பெண்களுக்கு அருமருந்து பூசணி விதை
சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும், பூசணி விதைகளில் உள்ள சத்துக்கள் என்ன? மருத்துவ குணங்கள் என்னென்ன? கால்சியம் நிறைந்த பூசணி விதைகள் எலும்புக்கும் பற்களுக்கும் உறுதியை தருவதாக சொல்வது ஏன்? எந்தெந்த வழியில் பூசணி விதையை பயன்படுத்தலாம்? ஆண்களுக்கு பூசணி விதைகள் எந்த வகையில் மருந்தாகின்றன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம். பரங்கி விதை என்று சொல்லக்கூடிய பூசணி விதைகளில், புரோட்டீன், அசிட்டிக் ஆசிட், வைட்டமின் B, தையமின், நியாசின், நார்ச்சத்து, தாதுக்கள், பாஸ்பரஸ் போன்றவையும், தாதுக்கள், பாஸ்பரஸ் சத்துக்களும் உள்ளன..

பூசணி விதைகள்
100 கிராம் பூசணி விதையில் மட்டுமே 18 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. எனவே அஜீரண கோளாறுகள் இருப்பவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு இந்த பூசணி விதைகள் உதவுகின்றன. ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க உதவுகிறது.
இதற்கு பூசணி விதையை சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து தூளாக அரைத்து கொள்ள வேண்டும். இதை தினமும் பயன்படுத்தினாலே ஆரோக்கிய நன்மையை பெறலாம். கிட்னியில் கற்களையும், குடற்புழுக்களை தங்கவிடாமலும் நீக்கும் தன்மை இந்த பூசணி விதைக்குண்டு.. மேலும் கல்லீரலில் உள்ள கிருமிகள், நச்சுக்கள், தொற்றுக்களையும் வெளியேற செய்துவிடும்.
உடல் எடை குறையும்
உடலில் கொழுப்பு, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தையும் இந்த பவுடர் பெருக்க செய்கிறது. கீல்வாதம் பாதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு, மூட்டு வலி பாதிப்பு போன்றவற்றுக்கு இந்த பூசணி விதை மருந்தாகிறது. எனவே மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இதனை உட்கொள்ளலாம்.
இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள், தலைமுடி அதிகமாக கொட்டினால், வைட்டமின் சி நிறைந்த பூசணி விதை கை கொடுத்து உதவுகிறது. மேலும், பூசணி விதைகள் கெட்ட கொழுப்பினை கரைக்கக்கூடியது என்பதால், ஹார்ட் அட்டாக், பக்கவாதம் வாய்ப்புகள் குறைகின்றன.. ரத்த நாளங்களின் தளர்வு , தடையற்ற குடல் செயல்பாடு போன்ற உடலியல் செயல்பாட்டுக்கும் இந்த விதைகள் உதவுகின்றன.
ஆண்கள் - பெண்கள்
விந்தணு எண்ணிக்கை பராமரிக்கவும், தரத்தை மேம்படுத்தவும், பூசணி விதைகள் ஆண்களுக்கு கை கொடுக்கின்றன.. ஏனென்றால், துத்தநாகம் குறைபாடு இருந்தால், விந்தணு தரம் குறையும்.. ஆனால், பூசணி விதைகளில் அபரிமிதமான துத்தநாகம் உள்ளதால், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த முடியும்.
பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்கும், வௌளைப்போக்கு பிரச்சனைக்கும், இதே பூசணி விதையே பயன்படுகின்றன.. சமீக காலமாக, பெண்களை வெகுவாக பாதிக்கக்கக்கூடியதாக மார்பக புற்றுநோய் உருமாறி உள்ளது.. இந்த புற்றுநேயின் வளர்ச்சியை தடுப்பதில், பூசணி விதைகளுக்கு நிறைய பங்குஇருப்பதாகவும், விதையிலுள்ள பைட்டோ கெமிக்கல்கல் கேன்சரை தடுக்க உதவுவதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications