உள்ளுறுப்புகளை க்ளீன் செய்யும் கிழங்கு.. எப்பேர்ப்பட்ட விஷக்கடிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலை
சென்னை: சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை நிறைய சாப்பிட்டால் என்னாகும்? சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலைகளை சாப்பிடலாமா? அதைபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சர்க்கரைவள்ளி கிழங்கினை தினமும் உண்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில் இதில் அதிக அளவில் போலெட்ஸ் நிறைந்துள்ளது. செரிமான கோளாறுகளை சரிசெய்து, எதிர்ப்பு மண்டலத்தையும் பராமரிக்க இந்த கிழங்கு உதவுகிறது, தைராய்டு சுரப்பி, பற்கள், நரம்புகள், எலும்புகளுக்கு பலத்தை தரக்கூடியது..

வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கசெய்வதிலும், புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் பங்கு மிக அதிகமாக உள்ளன. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இந்த கிழங்கு சிறந்த தேர்வாகவும் அமைகிறது. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகின்றன.
சிறுநீரகம்: இத்தனை சத்துக்கள் இருந்தாலும், சர்க்கரை வள்ளிக்கிழங்கை அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.. காரணம், இதில், ஆக்சலேட் எனப்படும் கரிம அமிலம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகத்துக்கு நல்லதல்ல.. அதிலும், சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்..
இதைத்தவிர, ஆன்டி ஆக்ஸிடன்ட் சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ளதால், இதை அதிகமாக சாப்பிட்டால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..
பொட்டாசியமும், வைட்டமின் ஏ சத்துக்களும் இதில் நிறைய உள்ளன.. பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், மாரடைப்பு வரை அபாயம் ஏற்படலாம்.. A வைட்டமின் நிறைய சாப்பிட்டால், புருவங்களில் முடி உதிர்தல், உதடு வெடிப்பது போன்ற பிரச்சனை வரலாம்.. ஆகமொத்தம் நிறைய கிழங்கு சாப்பிட்டால் அஜீரணம், மந்தநிலை முதல் கல்லீரல் பாதிப்பு வரை ஏற்பட்டுவிடும் என்பதால், அளவுடன் சாப்பிடுவது சிறந்தது.
கல்லீரல்: ஒருவேளை கல்லீரல் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்கனவே இருப்பவர்கள் இதனை எடுத்துக்கொண்டால், விளைவுகள் மோசமாகலாம்.. மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான கோளாறு, வயிறு உபாதைகள் போன்றவையும் ஏற்படலாம்.. நார்ச்சத்து அதிகம் என்றாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது கிடையாது.
சர்க்கரைவள்ளி கிழங்கைவிட, அதன் இலைகளிலேயே அதிக சத்துக்கள் உள்ளதாம்.. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் C, K, பொட்டாசியம், சோடியம், போரேட் அடங்கி உள்ளது. இந்த கிழங்கின் இலை விஷக்கடிக்கு மருந்தாகிறது. தேள், பூச்சி போன்ற விஷஜந்துக்கள் கடித்துவிட்டால், இந்த இலையை பச்சையாக அரைத்து கட்டுவதால் விஷம் முறியுமாம்.. வலி, வீக்கமும் குறையும் என்பார்கள்.
பேஸ்ட்: அதேபோல, தோலில் ஏதாவது அலர்ஜி, அரிப்பு வந்தாலும், இந்த இலையை உபயோகப்படுத்தலாம்.. அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கையே, நன்றாக வேக வைத்து மசித்து, அதனுடன் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.. விழுதுபோல சுண்டி வந்ததுமே, அதை அலர்ஜி, அரிப்புள்ள இடத்தில் தடவினால் தீர்வு கிடைக்கும்
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications