இந்த ஒரு இலை மேஜிக்கை பாருங்க! சிறுநீரக கற்களை கரைக்கும்.. ஆஸ்துமாவை விரட்டும்.. இத்தனை பயன்களா?
சென்னை: கற்பூரவள்ளி இலைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் நல்ல பலன்களை அளிக்கும் . இந்த இலையை அப்படியே சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை பார்க்கலாம்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய பிரச்சினையே நெஞ்சு சளியும் வறட்டு இருமலும்தான். பருவநிலை மாறும் போது சளியாலும் இருமலாலும் அவதிப்படுகிறார்கள். இதற்கு எத்தனை மருத்துவம் பார்த்தாலும் அந்த நேரத்திற்கு சரியாகிறது.

ஆனால் இயற்கை மூலிகைகளை கொண்டு சளி தொல்லையையும் இருமல் தொல்லையையும் எப்படி நீக்குவது என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. நிறைய மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் இருக்கும்.
ஆனால் அவற்றின் மகத்துவமே தெரியாமல் இருக்கும். எல்லார் வீட்டிலும் வளர்க்கிறார்கள், அதனால் நானும் வளர்க்கிறேன் என வளர்ப்பார்கள். அப்படி பலரால் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செடி கற்பூரவள்ளி, இதை ஓமவள்ளி என்றும் அழைப்பார்கள். இந்த செடியின் இலைகள் கற்பூரம் போல் வாசனை இருக்கும்.

அது போல் இலைகள் சற்று தடியாக இருக்கும். அதில் சிறிய அளவில் சொனைகள் இருக்கும். இந்த செடி வளர்க்கப்படும் வீடுகளில் இதன் மகத்துவம் குறித்து தெரியும். சளி தொல்லை, இருமல் தொல்லையை நீக்கிவிடும். இந்த இலையை அப்படியே கழுவிவிட்டு சாப்பிடலாம். ஆனால் காரல் எடுக்கும். எனவே குழந்தைகளாக இருந்தால் மிகச் சிறிய இலை பெரியவர்களுக்கு காரம் தாங்கும் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

சிறு குழந்தைகள் இதை சாப்பிடாவிட்டால் அந்த இலைகளின் சாறுகளை எடுத்துக் கொண்டு அதில் தேன் கலந்து கொடுக்கலாம். சொறி, படை, அரிப்பு, தோலில் தொற்று உள்ளிட்டவை ஏற்பட்டால் அதற்கு இந்த இலைகளை எடுத்து சாறு எடுத்து தோல் பகுதிகளில் விட்டு வர வேண்டும் . அவை விரைவில் குணமாகும். மழை காலங்களில் சுவாச பிரச்சினை ஏற்படும்.
சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டை கமருதல் போன்றவை இருக்கும். அவற்றுக்கு சித்த மருத்துவரின் துணையுடன் மூக்கில் கற்பூரவள்ளியின் சாறுகளை விடலாம். குழந்தைகளுக்கு மார்பு பகுதியில் இருக்கும் சளி நீங்கவும், ஆஸ்துமா நோய் நீங்கவும் கற்பூரவள்ளியையும் துளசி இலையையும் சம அளவு எடுத்துக் கொண்டு இலைகளை கழுவி அதை லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை 5 மில்லி கொடுக்கலாம்.
அஜீரண பிரச்சினைகளுக்கும் இது தீர்வை கொடுக்கும். சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகபடியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும். சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கும் மூலிகையாக கற்பூரவள்ளி இருக்கும்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications