இந்த ஒரு இலை மேஜிக்கை பாருங்க! சிறுநீரக கற்களை கரைக்கும்.. ஆஸ்துமாவை விரட்டும்.. இத்தனை பயன்களா?
சென்னை: கற்பூரவள்ளி இலைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் நல்ல பலன்களை அளிக்கும் . இந்த இலையை அப்படியே சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை பார்க்கலாம்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய பிரச்சினையே நெஞ்சு சளியும் வறட்டு இருமலும்தான். பருவநிலை மாறும் போது சளியாலும் இருமலாலும் அவதிப்படுகிறார்கள். இதற்கு எத்தனை மருத்துவம் பார்த்தாலும் அந்த நேரத்திற்கு சரியாகிறது.

ஆனால் இயற்கை மூலிகைகளை கொண்டு சளி தொல்லையையும் இருமல் தொல்லையையும் எப்படி நீக்குவது என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. நிறைய மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் இருக்கும்.
ஆனால் அவற்றின் மகத்துவமே தெரியாமல் இருக்கும். எல்லார் வீட்டிலும் வளர்க்கிறார்கள், அதனால் நானும் வளர்க்கிறேன் என வளர்ப்பார்கள். அப்படி பலரால் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செடி கற்பூரவள்ளி, இதை ஓமவள்ளி என்றும் அழைப்பார்கள். இந்த செடியின் இலைகள் கற்பூரம் போல் வாசனை இருக்கும்.

அது போல் இலைகள் சற்று தடியாக இருக்கும். அதில் சிறிய அளவில் சொனைகள் இருக்கும். இந்த செடி வளர்க்கப்படும் வீடுகளில் இதன் மகத்துவம் குறித்து தெரியும். சளி தொல்லை, இருமல் தொல்லையை நீக்கிவிடும். இந்த இலையை அப்படியே கழுவிவிட்டு சாப்பிடலாம். ஆனால் காரல் எடுக்கும். எனவே குழந்தைகளாக இருந்தால் மிகச் சிறிய இலை பெரியவர்களுக்கு காரம் தாங்கும் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

சிறு குழந்தைகள் இதை சாப்பிடாவிட்டால் அந்த இலைகளின் சாறுகளை எடுத்துக் கொண்டு அதில் தேன் கலந்து கொடுக்கலாம். சொறி, படை, அரிப்பு, தோலில் தொற்று உள்ளிட்டவை ஏற்பட்டால் அதற்கு இந்த இலைகளை எடுத்து சாறு எடுத்து தோல் பகுதிகளில் விட்டு வர வேண்டும் . அவை விரைவில் குணமாகும். மழை காலங்களில் சுவாச பிரச்சினை ஏற்படும்.
சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டை கமருதல் போன்றவை இருக்கும். அவற்றுக்கு சித்த மருத்துவரின் துணையுடன் மூக்கில் கற்பூரவள்ளியின் சாறுகளை விடலாம். குழந்தைகளுக்கு மார்பு பகுதியில் இருக்கும் சளி நீங்கவும், ஆஸ்துமா நோய் நீங்கவும் கற்பூரவள்ளியையும் துளசி இலையையும் சம அளவு எடுத்துக் கொண்டு இலைகளை கழுவி அதை லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை 5 மில்லி கொடுக்கலாம்.
அஜீரண பிரச்சினைகளுக்கும் இது தீர்வை கொடுக்கும். சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள அதிகபடியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து அக்கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும். சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கும் மூலிகையாக கற்பூரவள்ளி இருக்கும்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications