இளகிய மனம் கொண்டவர்கள் இந்த செய்தியை படிக்காமல் கடந்து செல்வதே நல்லது- நிர்வாகம் பொறுப்பல்ல!
டெல்லி: உலக நாடுகளில் பொதுவாக மாரடைப்பு அல்லது உயிரைப் பறிக்க்ம் ஹார்ட் அட்டாக் என்பது ஒருகுறிப்பிட்ட கிழமையில்தான் பெரும்பாலானோருக்கு வருவதாக வெளிநாட்டு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் கனத்த இதயத்துடன் இந்த செய்தியை தொடர்ந்து படிக்கவும்.
இன்றிருப்பார் நாளை இல்லை.. இப்ப பேசிக் கொண்டிருப்பார் ரெண்டு செகண்டுல என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.. நல்லா ஆடிகிட்டே இருந்தார்..அப்படியே மயங்கி சரிந்தார்.. மாண்டு போனார்

இப்படித்தான் திடீர் மரணங்கள் குறித்த பேசுபொருட்கள் இருக்கின்றன. இப்படியான திடீர் மரணங்களையே ஆய்வு செய்தால்தான் என்ன? என களமிறங்கியது அயர்லாந்து ராயல் காலேஸ் ஆப் சர்ஜன்ஸ் மற்றும் பெல்பாஸ் ஹெல்த், சோசியல் கேர் டிரஸ் ஆகியவை. மொத்தம் 10,528 நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளுடன் இந்த ஆராய்ச்சி. மேற்கொள்ளப்பட்டது. British Cardiovascular Society-ல் கடந்த 4-ந் தேதி இந்த ஆராய்ச்சி முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் 2013- 2018ம் ஆண்டுகளில் அயர்லாந்தில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனைகளில் பெரும்பாலானோர் அனுமதிக்கப்பட்டது திங்கள்கிழமையில்தானாம். திங்கள்கிழமையன்று ஏன் இந்த மாரடைப்பு ஏற்படுகிறது என்பது குறித்து தொடர்ந்து ஆராயப்படுகிறதாம். முந்தைய ஆராய்ச்சிகளிலும் கூட திங்கள்கிழமைகளில்தான் அதிக மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்திலும் கூட மாரடைப்பு ஏற்படும் கிழமை தொடர்பான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்கின்றன ஊடக செய்திகள்.
இதென்னய்யா ஒரு தினுசா இருக்கே!












Click it and Unblock the Notifications