கற்பூரவல்லி.. தினமும் 3 இலை போதும்.. பயனுள்ள கற்பூரவல்லி இலை.. சளி, இருமலை ஓட ஓட விரட்டிடும் கஷாயம்
சென்னை: சுவாச கோளாறுகளை முழுமையாக நீக்கும் கற்பூரவல்லி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? சளி, இருமலை போக்கும் கற்பூரவல்லி கஷாயம் எப்படி வைப்பது தெரியுமா?
கற்பூரவல்லி இலைகளில் வைட்டமின் C , A ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கக்கூடிய மூலிகையாக உள்ளது. நம்முடைய உள்ளுறுப்புகள் முதல் சருமம் வரை உடலுக்கு கவசம்போல் பாதுகாக்கிறது.

நுண்கிருமி: சருமத்தில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு ஏற்பட்டால், இந்த கற்பூரவல்லி இலைகளை நன்றாக கசக்கி, அந்த இலைகளின் சாற்றினை பாதிக்கப்பட்ட பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும். இந்த இலையில் தைமால் என்ற வேதிப்பொருட்கள், பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாவை அழிக்கக்கூடிய சக்தி கொண்டது. அதனால்தான், ஏராளமான பற்பசைகளின் தயாரிப்புகள் இந்த இலைகளையும் மூலப்பொருட்களாக சேர்க்கிறார்கள்.
செரிமானம் தொந்தரவால் அவதிப்படுபவர்கள், கற்பூரவல்லி சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.. இந்த இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்று போல போட்டாலே தலைவலி பறந்துவிடும்.
கற்பூரவல்லி இலைகள்: நுரையீரலுக்கு கவசமாக திகழ்கிறது கற்பூரவல்லி இலைகள். சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டடை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற சுவாச கோளாறுகளை போக்க இந்த இலைகள் பயன்படுகின்றன.
நெஞ்சில் சளி, கபம் கட்டிவிட்டால், இந்த கற்பூரவல்லியின் ஒரே ஒரு சிற்றிலை மட்டும் எடுத்து, அதை நெருப்பில் வாட்டி, கையால் கசக்கி சாறு எடுத்து வடிகட்டி சங்கில் ஊற்றி கைக்குழந்தைகளுக்கு தருவார்கள். பெரியவர்களுக்கு சளி, இருமல் பிரச்சனை நீங்க வேண்டுமானால், 3, 4 கற்பூரவல்லி இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
கிராம்பு: அல்லது இந்த இலைகளை விழுதுபோல அரைத்து, அதை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிக்கொண்ட, சிறிது ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் சளி, தலைபாரம் தொந்தரவு நீங்கிவிடும். இந்த கற்பூரவல்லி இலைகளை, கையாலேயே கசக்கி, தண்ணீரில் போட்டு ஆவி பிடிப்பதால், தலைபாரம், நீர்க்கோப்புக்கு தீர்வு ஏற்படும்.
வெறும் கற்பூரவல்லி இலையை கசக்கி அதன் சாற்றின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்சினாலும், மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். இதனால், நுரையீரல் பாதை தொடர்பான தொற்றுகளும் விலகிவிடும்.
தொண்டை கரகரப்பு: கற்பூரவல்லி இலைகளுடன் ஏலம், கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து கஷாயமாக்கி, அதில் தேன் சேர்த்து குடிக்கலாம்.. தொண்டை கரகரக்கும்போதே, சிறிது இலையை மென்று சாப்பிட்டுவிட வேண்டும். இதனால், தொண்டையில் கட்டிய கபம் உடனே இளகிவிடும்.
கால்சியம் ,பொட்டாசியம் மெக்னீசிய சத்துக்கள் அடங்கியிருக்கும் இந்த கற்பூரவல்லி இலைகளை வைத்து, வேறுவகையிலும் சளி, இருமலுக்கு கஷாயம் செய்து குடிக்கலாம். அதாவது, கற்பூரவல்லி இலைகளை, சின்ன சின்ன துண்டுகளாக கிள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி திப்பிலி மற்றும் மிளகு இந்த இரண்டையும் கரகரப்பாக தூள் செய்து கொள்ள வேண்டும்.
கஷாயம்: இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கற்பூரவல்லி இலைகள், இடித்து வைத்திருக்கும் அரிசித்திப்பிலி, மிளகு, மற்றும் கருஞ்சீரகத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்... இறுதியில் வடிகட்டி அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தொண்டையில் படுமாறு இதை குடித்து வந்தாலே, சளி, இருமல், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவுகள், தொண்டைக்கட்டு, அஜீரணம் போன்ற அனைத்து சுவாச கோளாறுகளும் நீங்கும்..!!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications