வெறும் 21 வயசுதான்.. நண்பன் திருமணத்தில் குத்தாட்டம்.. பரிதாப இளைஞர்.. டாக்டர்கள் வார்னிங்கை பாருங்க
சென்னை: நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மது அருந்திவிட்டு நடனமாடிய 21 வயது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞர் மணி பிரசாத். இவரது நண்பருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். மணி பிரசாத்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு நடனம் ஆட வேண்டும் என்று தோன்றியுள்ளது.

இதனையடுத்து சக நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அதே இடத்தில் சுருண்டு விழுந்திருக்கிறார். உடனே பயந்து போன சக நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசாத் நடனமாடுவதற்கு முன்னர் நன்றாக குடித்திருந்திருக்கிறார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது போன்ற திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்களை மருத்துவர்கள் கார்டியாக் அரெஸ்ட் என்று சொல்கிறார்கள். திடீரென மேற்கொள்ளப்படும் கடினமான செயல்பாடுகளின் போது இதயமும், ரத்த குழாய்களும் விரிவடைகின்றன. இது ஒரு கட்டத்தை தாண்டும் போது இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. முதன்மையான காரணங்கள் மரபணு சார்ந்த குறைபாடுதான். குடும்பத்தில் இதற்கு முன்னர் யாருக்கேனும் இதுபோன்ற இதய பாதிப்பு வந்திருக்கிறது எனில், அது குடும்பத்தில் சந்ததியினருக்கும் தொடர வாய்ப்பிருக்கிறது. மட்டுமல்லாது மது, புகையிலை என போதைப்பொருட்களின் பயன்பாடும் இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக மருத்துவமனைக்கு வெளியே இதுபோன்று மாரடைப்பு ஏற்பட்டால், அதில் வெறும் 3-8 சதவிகிதத்தினர் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர். இப்படி இருக்கும் போது மாரடைப்பு குறித்து கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்படி மாரடைப்பு ஏற்படுமாயின் அதற்கான சில அறிகுறிகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
அதாவது, வயிற்று பிடிப்பு, மார்பில் அழுத்த உணர்வு, தொண்டையில் ஏதேனும் சிக்கியுள்ளதை போன்ற உணர்வு, வழக்கத்திற்கு மாறான சோர்வு, அதீத வியர்வை, இதயத்திலிருந்து கழுத்து, பல், முதுகு தண்டு வரை வலி பரவுவது, அதேபோல இதயத்திலிருந்து இடது கை முழுக்க வலிப்பது போன்றவை இதற்கான அறிகுறியாகும். ஆனால் பலரும் இதை சாதாரண கேஸ் பிரச்னை என்று நினைத்துவிடுகிறார்கள். எனவேதான் அவர்கள் உடனடியாக மருத்துவமனையை நாடுவதில்லை.
இதுவே பெரும்பாலானோரின் மரணத்திற்கு காரணமாகிவிடுகிறது. எனவே, இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகுங்கள். அதேபோல இதனை வரும் முன் காப்பதற்கு முயற்சிப்பது சிறந்தது. அதாவது, வெண்ணெய், பன்னீர், பாலாடைக்கட்டி, நெய் மற்றும் சிவப்பு இறைச்சிக்கு பதிலாக தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி, மீன் இறைச்சி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்துக்கள் அதிகம் இருக்கிறது. அதேபோல பருப்பு மற்றும் கொட்டை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றையும் விட முக்கியமானது மன நலன்தான். எனவே பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications