என் கனவை விட்டுக் கொடுத்து உங்கள் கனவுகளை நனவாக்குவேன்: இது ராகுல் காந்தி...

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி உதய்பூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் பேசியதாவது:
நீங்கள் எங்களை விமர்சித்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. நாங்கள் காங்கிரஸ் படைவீரர்கள். இந்த நாட்டுக்காக சேவையாற்றுகிறவர்கள்.
இந்தியாவின் ஏழை எளிய மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர். இதனாலேயே எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சியினர் மீது ஆத்திரத்தில் இருக்கின்றனர்.
என்னுடைய கனவுகளை நான் விட்டுக் கொடுத்து உங்களது கனவுகளை நனவாக்க விரும்புகிறேன். விமான நிலையம், உள்கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கியிருக்கிறோம் என்று சிலர் பேசுகின்றனர். இதனால் இந்த நாடு மகிழ்ச்சி அடைகிறது.
ஆனால் இந்த நாடு முன்னேற்றத்தை அடையாத வரையில் அந்த சாலையும் விமான நிலையங்களும் போடுகிறவர்களுக்கு நாள்தோறும் உணவு கிடைக்காது. காங்கிரஸ் அரசின் உணவு உத்தரவாத சட்டத்தால் இந்த நாட்டில் எவருமே பசியோடு இருக்கப் போவதில்லை.
இந்தியா என்பது பல மலர்களைக் கொண்ட தேசம். இந்த நாட்டில் ஹிந்து, இஸ்லாமியர்கள் அல்லது ஆதிவாசிகள் என அனைத்து தரப்பினருமே ஒளிர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எதிர்க்கட்சியினரோ அனைத்து சிறுபான்மையினரையுமே மறக்க விரும்புகின்றனர்.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் எந்த அரசும் தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலத்தை கட்டாயமாக பறித்துவிட முடியாது. ஒடிஷாவின் நியாம்கிரியில் அந்த மலையை பழங்குடி இன மக்கள் தெய்வமாக மதிக்கின்றனர். ஆனால் பாஜகவினரும் பிஜூ ஜனதா தளத்தினரும் அதை பறித்துக் கொடுக்க முயற்சிக்கின்றனர்.
காங்கிரஸ் அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவாது ஏழை மக்களின் நிலத்தை எவரும் கட்டாயமாக பறித்துவிடக் கூடாது என்பதற்காகவே;.
இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications