எங்களுக்கு அதிகார வர்க்கத்திடம் இருந்து சுதந்திரம் வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ!
டெல்லி: வழக்கு விசாரணையின் போது தங்களுக்கு அதிகாரவர்க்கத்திடம் இருந்து சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலை 33 அதிகாரிகளை கொண்ட சி.பி.ஐ. குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதைத்தொடர்ந்து தங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று கோரி சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சி.பி.ஐ. இயக்குநருக்கு கூடுதல் நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான அமரேந்திர சரண், நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தடைகளை சி.பி.ஐ. சந்திக்க வேண்டி உள்ளது. சி.பி.ஐ. தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுவதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அரசின் செயலாளருக்கு உரிய அதிகாரங்களை சி.பி.ஐ. இயக்குனருக்கு வழங்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவே அதிகாரவர்க்கத்திடம் இருந்து சி.பி.ஐ.க்கு சுதந்திரம் வேண்டும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியை கேட்டுக்கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications