லோக்சபா தேர்தல் மூலம் நாட்டுக்கான "நல்ல தலைவரை" அளிப்போம்: அருண் ஜேட்லி

டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அருண் ஜேட்லி, நாட்டில் நல்ல தலைமை இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நல்ல தலைமையை நாட்டுக்கு அளிப்போம். லோக்சபா தேர்தல் என்பது நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலைப் போன்றது.
எங்களைப் பொறுத்தவரையில் எங்களது தலைமை எது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். விரைவில் அறிவிக்கவும் இருக்கிறோம். ஆனால் பாரதிய ஜனதா கட்சி எழுப்பியிருக்கும் இந்த சவாலுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் இருந்து பதில் இல்லை. ஏனெனில் அவர்கள் பரம்பரை அரசியலை பற்றி சிந்திப்பவர்கள்.
லோக்சபா தேர்தல் மூலமாக திறமையுள்ள ஒரு நல்ல தலைவரை பாஜக இந்த நாட்டு மக்களுக்கு தருவோம். மக்களின் நம்பிக்கைக்கேற்பவே நாட்டின் தற்போதைய அரசியலும் சென்று கொண்டிருக்கிறது என்றார் அவர்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடும் என்ற நிலையில் "நல்ல தலைவரை" நாட்டுக்கு அளிப்போம் என்ற அருண் ஜேட்லியின் பேச்சு, மோடிக்கான அவரது ஆதரவை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications