ஈரான்: நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தப் பேருந்துகள்: 44 பேர் பலி, 39 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil

நேற்றிரவு, 11 மணியளாவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, ஈரான் - கோம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாரா விதமாக அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, அதன் முன்னே சென்றுகொண்டிருந்த காரின் மீதும், அதனைத் தொடர்ந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீதும் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.
பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்து, அதில் பயணம் செய்த பயணிகள் சுதாரிப்பதற்கு முன் தீ மளமளவெனப் பரவியது.இதில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் 44 பேர் பரிதாபமாக பலியாயினர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் மேற்கொண்ட முயற்சியில் படுகாயமடைந்த 39 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications