8ம் வகுப்பு தகுதி.. 50 ஆயிரம் வரை சம்பளம்.. சென்னையில் காத்திருக்கும் அரசு வேலை!
சென்னை: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் 8ம் வகுப்பு தகுதிக்கு 25 அலுவலக உதவியாளர் பணிகள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில். சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள 25 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 16ம் தேதி (இன்று) முதல், வருகிற 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாத சம்பளம் ரூ.15,700 - 50,000 (லெவல்-1) வழங்கப்படும். 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இப்பணிக்கான விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது இந்த அலுவலகத்தில் நேரிடையாகவோ வந்து சமர்ப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். வருகிற 31ம் தேதி மாலை 5.45 மணி வரை கடைசி நாள் என தெரிவித்துள்ளார்..












Click it and Unblock the Notifications