263 பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு.. தேதி முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை சார்நிலைப்பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்லை அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்தது. விண்ணப்பிக்கும் தேதி முடிய போவதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை சார்நிலைப்பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்லை அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: உதவி வேளாண்மை அலுவலர், (79+5) மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் (148 + 31) என மொத்தம் 263 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வரும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து 2 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ (agriculture) முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த விரிவான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்களும் 32 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி/ எம்.பி.சி, பிசி, பிசிஎம், உள்ளிட்ட பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.
சம்பளம் எவ்வளவு: சம்பளத்தை பொறுத்தவரை உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு ரூ.20,600 - 75,900 வரையும், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடத்திற்கு ரூ.20,600 - 75,900 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் ஒரு நாளே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
தேர்வு எப்போது?: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் கணிணி வழி தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அரசு விதிகளின் படி தேர்வு கட்டண சலுகையும் உண்டு.
தேர்வு குறித்த அறிவிப்பை படிக்க https://www.tnpsc.gov.in/Document/tamil/26_2023-Tam.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications