Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்ட்ரல் வங்கியில் 3,000 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! உடனே அப்ளை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 3,000 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றாக சென்ட்ரல் வங்கி உள்ளது. பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் வங்கியின் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ளன. சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாக அவ்வப்போது நிரப்பப்படுகிறது. அதுபோக அவ்வப்போது பயிற்சி பணியிடங்களும் சென்ட்ரல் வங்கியில் நிரப்பப்படுகிறது.

Central Bank Bank job jobs

பணியிடங்கள்: அந்த வகையில் தற்போது 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 31.03.2020 க்கு பிறகு பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 01.04.1996 - 31.03.2004க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வரையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்..10 ம் வகுப்பு தகுதி தான்.. நோ எக்ஸாம்! செம சான்ஸ் விட்றாதீங்க


சம்பளம் எவ்வளவு?: இந்த பணியிடங்கள் முற்றிலும் பயிற்சி (apprenticeship) அடிப்படையிலானது ஆகும். தேர்வு செய்யப்படும் விண்னப்பதாரர்கள் ஓராண்டுக்கு பணியில் அமர்த்தப்படுவார்கள். ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதர சலுகைகள் எதுவும் கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ரூ.400 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 17 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு மற்றும் மொழித்திறன் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification-Engagement-of-Apprentices-2024-25.pdf என்ற இணையதளத்தை பார்வையிடவும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+