தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (டி.என்.எஸ்.ஐ.சி) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (டி.என்.எஸ்.ஐ.சி) அலுவலக உதவியாளர் பணிக்கு 4 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு 8 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30 - 35 ஆகும். இந்த பணிக்கு www.tnsic.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வருகிற 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். சம்பளம், விண்ணப்ப கட்டணம் உள்பட மேலும் விவரங்களை www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications