பெல் நிறுவனத்தில் வேலை.. 680 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. ரெடியா
திருச்சி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் 680 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களைபார்க்கலாம்.
பெல் என்று அழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் திருச்சியில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இதில், 680 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: பட்டதாரி அப்ரண்டீஸ் (பயிற்சி) 179, டெக்னிஷியன் அப்ரண்டீஸ்- 398, டிரேட் அப்ரண்டீஸ்: 103 என மொத்தம் 680 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டெக்னிஷியன் அப்ரண்டீஸ் பணிகளில், ஏசி மெக்கானிக், கார்பெண்டர், எலக்டிரிஷியன், பிட்டர், மேசன், மோட்டார் மெக்கானிக், பிளம்பர் வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அதேபோல், பட்டதாரி பயிற்சி பணிகளில் அக்கவுண்டண்ட், சிவில் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை விண்ணப்ப அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது. அதாவது, பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். பணியிடங்களுக்கு ஏற்ற துறையில் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.
பொது பிரிவினர், ஒபிசி ஆகியோர் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெக்னிஷியன் பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு பெற்று இருக்க வேண்டும். 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு: ஊதியத்தை பொறுத்தவரை இது முற்றிலும் ஒரு ஆண்டு ஒப்பந்த பணியாகும். பட்டதாரி அப்ரண்டீஸ் பணிக்கு ரூ.9 ஆயிரமும், டெக்னிஷியன் அப்ரண்டீஸ் பணிக்கு ரூ.8 ஆயிரமும், டிரேட் அப்ரண்டீஸ் பணிக்கு ரூ.7,700- 8,050ம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 01.12.2023 ஆகும். மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப அறிவிப்பை படிக்க https://trichy.bhel.com/tms/app_pro/Trade_App.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications